ஜம்மு-காஷ்மீரில் மோசமடைந்து வரும் வானிலைக்கு இடையே, தோடா மாவட்டத்தின் கஹாரா பகுதியில் உள்ள கங்குரி நல்லாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக, பள்ளிச் சிறார்களின் உயிர்களுக்குப் பெரிய ஆபத்து ஏற்பட்டது. பள்ளியிலிருந்து வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்த குழந்தைகள், இந்த நல்லாவைக் கடக்க முயன்றபோது வெள்ளத்தின் காரணமாக நீரின் மட்டம் திடீரென உயர்ந்தது.
இதன் காரணமாகச் சிறுவர்கள் அனைவரும் வேகமாகப் பாயும் வெள்ள நீரில் பல மணி நேரம் சிக்கித் தவித்தனர். இதனால் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பும், பதற்றமான சூழலும் நிலவியது. குழந்தைகளைக் காப்பாற்ற அங்குள்ள மக்கள் அனைவரும் திரண்டதால் நிலமை கட்டுக்குள் வந்தது.
https://twitter.com/ndtvindia/status/2090262977077543381/video/1
அதிர்ஷ்டவசமாக, உள்ளூர் மக்கள் சரியான நேரத்தில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் அனைத்துக் குழந்தைகளையும் பாதுகாப்பாக மீட்டனர். அவர்களின் இந்தச் சமயோசிதமான மற்றும் வீரமிக்க செயலால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு, குழந்தைகள் அனைவரும் நலமாக வீடு திரும்பினர்.
