தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நேற்று இரவு 7:30 மணிக்கு கரூரில் பிரச்சாரம் செய்யும் இடத்திற்கு வந்தடைந்தார். 12 மணிக்கு அவர் வருவார் என கூறப்பட்ட நிலையில் விஜய் வருவதற்கு தாமதம் ஏற்பட்டது. அவரை பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் கூடி இருந்தனர். இந்த நிலையில் விஜய் பேசிக்கொண்டிருந்த போது கூட்ட நெரிசலில் சிக்கி பலர் மயங்கி விழுந்தனர். இந்த கோர சம்பவத்தில் தற்போது வரை 40 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தேர்தல் சுற்று பயணத்தில் இவ்வளவு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த சம்பவத்தில் ஹேமலதா என்ற தாயும், கரூர் தனியார் பள்ளியில் பயிலும் அவருடைய குழந்தைகளான சாய் லக்ஷனா, சாய் ஜீவா ஆகிய ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் பரிதாபமாக உயிர் இழந்துள்ளனர். அதாவது கரூர் தனியார் பள்ளியில் பயிலும் அக்கா தங்கை மற்றும் அம்மா என ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் விஜய்யை பார்க்க போலாம் என புறப்பட்ட தாய் , மகன், மகள் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டு விட்டனர். கரூரை சேர்ந்த ஆனந்த ஜோதி என்பவரது மனைவி ஹேமலதா ஒரு குழியில், அவரது மகள் மற்றும் மகன் இருவரும் ஒரே குழியில் தாய்க்கு அருகிலேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். எத்தனை எத்தனை கனவுகளுடன் ஆசையாக வளர்த்த பிள்ளைகளையும் மனைவியையும் பிரிந்து இன்று மீளா துயரத்தில் ஆழ்ந்த கணவருக்கு யார் ஆறுதல் கூறுவது என்றே தெரியவில்லை.
பென்சில்வேனியாவில் சிறுமியை பல ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்ததாக 37 வயதான நிக்கோலஸ் ஆலன் ஸ்பென்சர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய உட்கட்சி மோதல்கள் அதிமுகவில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன. தேர்தல் பின்னடைவுக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியே காரணம்…
தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் விவாதம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான சி.வி.…
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள நர்பத்கேடா பகுதியைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவியும், தேவன்ஷ் என்ற இளைஞரும்…
பெங்களூருவில் உணவு சமைத்து தராத ஆத்திரத்தில் மனைவியை கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, உடலை போர்வைக்குள் மறைத்து பீகாருக்கு தப்பிய…
ஹரியானாவின் சர்க்கி தாத்ரி மாவட்டத்தில் நீதிமன்ற வளாகத்திற்கு அருகே பட்டப்பகலில் நடந்த பயங்கர துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 7 பேர்…