“யாராக இருந்தாலும் பதவி போயிடும்…” பகீர் கிளப்பும் பழனி நில முறைகேடு… முதல்வர் விஜய்யின் அதிரடி முடிவு… அதிரும் தலைமைச் செயலகம்…!

Spread the love

தமிழகத்தில் துறை வாரியாக அரசுப் பணிகளை ஆய்வு செய்து வரும் முதல்வர் விஜய், இன்று அறநிலையத்துறை மற்றும் சுற்றுலாத்துறை குறித்த முக்கிய ஆய்வுக் கூட்டங்களை நடத்துகிறார். இன்று பிற்பகலில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், துறை செயலாளர் குமரகுருபரன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். வரவிருக்கும் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் மற்றும் துறையின் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகக் கூறப்பட்டாலும், அண்மையில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள பழனி கோவில் நில முறைகேடு விவகாரம் குறித்தே இந்த கூட்டத்தில் முதல்வர் கடுமையான கேள்விகளை எழுப்புவார் எனத் தெரிகிறது.

பழனி முருகன் கோவில் அடிவாரத்தில் உள்ள தண்டபாணி சுவாமி மடத்தின் அறக்கட்டளைக்குச் சொந்தமான, சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 1.40 ஏக்கர் நிலம் கடந்த 6-ஆம் தேதி வெறும் 2 கோடி ரூபாய்க்குத் தனியாருக்கு முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டது. பக்தர்களின் வாகன நிறுத்தமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த நிலம் கைமாறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதற்குப் பொறுப்பான சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். நிலத்தை வாங்கிய வெள்ளத்துரை, சேதுபதி மற்றும் விழுப்புரத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் முருகதாஸ் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தற்போது சிபிசிஐடி விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, இந்த பத்திரப்பதிவு செல்லாது என்று நீதிமன்றமும் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

இந்த நில முறைகேடு விவகாரத்தில் தனது பெயர் அடிபட்டதை அமைச்சர் ரமேஷ் திட்டவட்டமாக மறுத்துள்ள போதிலும், இந்தச் சம்பவத்தால் முதல்வர் விஜய் கடும் அப்செட்டில் இருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. “முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், தெரிந்தவர் தெரியாதவர் என்று பார்க்காமல் பதவி பறிக்கப்படும்” என முதல்வர் ஏற்கனவே எச்சரித்திருந்த நிலையில், இன்றைய கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் அவர் விரிவான விளக்கங்களைக் கேட்டு ‘கிடுக்கிப்பிடி’ கேள்விகளை எழுப்பக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இன்றைய ஆய்வுக்கூட்டம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் முக்கியத்துவத்தையும் பெற்றுள்ளது.

Visaka

Recent Posts

அம்மா… இரண்டே இரண்டு நிமிடம் பேசுங்களேன்… திரும்பிப் பார்க்காத பெற்றோர்… மகன் எடுத்த விபரீத முடிவு… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

கல்லூரியிலிருந்து மனவுடைச்சலோடு வீடு திரும்பிய ஆரியன், தன் பாரத்தைப் பகிர்ந்துகொள்ள குடும்பத்தினரின் அன்பைத் தேடினான். சமையலறையில் இருந்த அம்மாவிடம், "இரண்டு…

9 minutes ago

பட்டப்பகலில் ரத்த வெள்ளத்தில் பிரபல ரவுடி… 8 பேர் கொண்ட கும்பல் செய்த அதிர்ச்சி காரியம்…. புதுச்சேரியை உலுக்கிய பயங்கரம்….!

புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் பட்டப்பகலில் பிரபல ரவுடி ஒருவரை 8 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டிக்கொலை…

17 minutes ago

ஐயோ… மகளைக் காப்பாற்றப் போய் நேர்ந்த கொடூரம்… தந்தையை வெட்டிக் கொன்ற கொடூரன்… நெஞ்சை நடுங்கவைக்கும் சம்பவம்…!

மதன்னாப்பேட்டை பகுதியில் தனது மகளைத் தொந்தரவு செய்ய வேண்டாம் எனக் கூறிய தந்தையைக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் ஐதராபாத்தின்…

21 minutes ago

“இனி எடப்பாடியை நம்ப மாட்டோம்”…. கடைசி நிமிடத்தில் அன்புமணி வைத்த செக்…. ஒரே ஒரு அறிக்கையால் அலறிய தமிழக அரசியல் களம்….!

தமிழ்நாட்டில் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும்…

21 minutes ago

“சாவு வீடு.. கல்யாணம்.. லண்டன்.. எல்லாத்துக்கும் திரிஷாவா?”…. உங்களுக்கு தங்கச்சியா? இல்ல துணைவியா?…. மேடையில் விஜய்யை கிழித்து தொங்கவிட்ட அதிமுக எஸ்பி சண்முகநாதன்….!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடலில் அதிமுக சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்…

28 minutes ago