BREAKING: முதல்வர் விஜய் இரவில் அவசர ஆலோசனை… பரபரக்கும் தமிழகம்…!

By Muthu Mani on வைகாசி 13, 2026

Spread the love

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெறவுள்ள முக்கியமான நம்பிக்கை வாக்கெடுப்பை முன்னிட்டு, முதலமைச்சர் விஜய் தனது அமைச்சர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ-க்களுடன் நள்ளிரவில் தீவிர ஆலோசனை மேற்கொண்டார். இந்த வாக்கெடுப்பின் போது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான உத்திகள் குறித்தும், சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அணிகள் தங்களுக்கு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்துள்ள சூழலில், அதனை எவ்வாறு ஒருங்கிணைப்பது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்த புதிய ஆதரவு நிலையின் மூலம், முதலமைச்சர் விஜய்க்கு 140-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்களின் பலம் கிடைக்க வாய்ப்புள்ளதால், இன்றைய வாக்கெடுப்பில் தவெக அரசு தனது பலத்தை உறுதி செய்யும் என அரசியல் வட்டாரங்களில் பலமாக எதிர்பார்க்கப்படுகிறது.