Connect with us

CINEMA

வருத்தத்துடன் பதிவு போட்ட ஏ.ஆர் ரகுமான்… உடனே ரிப்ளை செய்து முதல்வர் ஸ்டாலின் சொன்ன குட் நியூஸ்.. இனி வேற லெவல் தான்..!!

சென்னையில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் சமீபத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த திட்டமிட்டு இருந்தார். அதற்கான ஏற்பாடுகள் சென்னை நந்தனத்தில் நடைபெற்ற நிலையில் திடீரென சென்னையில் பிற்பகலில் இருந்து கனமழை பெய்தது. இதனால் சென்னையில் நடத்தப்பட இருந்த இசை நிகழ்ச்சி திடீரென தள்ளி வைக்கப்பட்டது. இது தொடர்பாக ஏ ஆர் ரகுமான் வெளியிட்ட பதிவில், மழை காரணமாக சென்னையில் நடைபெற இருந்த இசை நிகழ்ச்சியை தள்ளி வைத்துள்ளோம்.

Former Hero

   

நம்முடைய அரசாங்கத்தின் உதவியுடன் கலை நிகழ்ச்சிகள் மற்றும் சர்வதேச நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான சிறப்பான கட்ட உள்கட்டமைப்பை நம்முடைய அரசு மூலம் உருவாக்குவோம் என்று நம்புகிறேன் என ஏ ஆர் ரகுமான் குறிப்பிட்டு ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

M.K.Stalin இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@mkstalin)

இதற்கு பதில் அளித்துள்ள முதல்வர் ஸ்டாலின், சென்னை இந்த கோரிக்கையை விரைவில் நிறைவேற்றும் எனவும் ஈசிஆரில் நிறுவப்படும் kalaignar convention centre பெரிய வடிவ கச்சேரிகள், நிகழ்ச்சிகள் மற்றும் மாநாடுகளை நடத்தக்கூடிய உலகத்தரம் வாய்ந்த வசதியாக இருக்கும் இயற்கையான சூழலில் ஹோட்டல்கள் மற்றும் உணவு விடுதிகள் என அனைத்தும் இந்த சென்டரில் இருக்கும் இடம் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வருத்தத்துடன் ஏ ஆர் ரகுமான் வெளியிட்ட பதிவுக்கு உடனே முதல்வர் ஸ்டாலின் பதிலளித்த இவ்வாறு கூறியிருப்பது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

author avatar
Nanthini
Continue Reading

More in CINEMA

To Top