தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி உதவியாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று, அவர்களுக்கான மாதாந்தர சிறப்பு ஓய்வூதியம் (Special Pension) 2,000 ரூபாயிலிருந்து 3,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். அதேபோல், அவர்கள் ஓய்வு பெறும்போது வழங்கப்படும் பணிநிறைவு பணிக்கொடை (Ex-gratia payment) தொகையையும் 50,000 ரூபாயிலிருந்து 1 லட்சம் ரூபாயாக இருமடங்காக உயர்த்தி முதல்வர் பேரவையில் அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.
