விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் பரப்புரையில் ஆவேசமாகப் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், அதிமுக மற்றும் பாஜக இடையிலான ரகசிய உறவை மிகக்கடுமையாகச் சாடினார். தற்போதைய அதிமுகவை எடப்பாடி பழனிசாமி வழிநடத்தினாலும், அதன் பின்னணியில் பிரதமர் மோடியே அந்த இயக்கத்தை இயக்கி வருவதாகவும், தமிழகத்தில் அதிமுக கூட்டணி ஒருவேளை வெற்றிபெற்றால் அடுத்த ஆறே மாதங்களில் அண்ணாமலை அல்லது ஹெச். ராஜா முதல்வர் நாற்காலியில் அமரக்கூடிய சூழல் உருவாகும் என்றும் அவர் எச்சரித்தார்.
புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து அங்கே அதிமுகவின் செல்வாக்கை முற்றிலும் அழித்தது போல, தமிழகத்திலும் அதிமுகவை பாஜகவுக்குள் கரைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், இந்த ஆபத்தான அரசியலை உணர்ந்து மக்கள் மதச்சார்பற்ற கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் தனது உரையில் வலியுறுத்தினார்.
