மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் அதிரடி மாற்றம்.. இனி இவர்களுக்கு கிடைக்காது… முழு விவரம் இதோ..!!

By Soundarya on வைகாசி 14, 2026

Spread the love

தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்பட்டு வந்த ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்’, தற்போது நடைபெற்றுள்ள ஆட்சி மாற்றத்திற்குப் பிறகும் தொடர்வது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சமீபத்திய சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று, திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இத்திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து அதிகாரப்பூர்வ உத்தரவைப் பிறப்பித்துள்ளார். தேர்தல் வாக்குறுதியில் உரிமைத் தொகையை 2,500 ரூபாயாக உயர்த்துவதாக தவெக அறிவித்திருந்த நிலையில், தற்போது முதற்கட்டமாக மே 2026 மாதத்திற்கான தொகையை வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தினை மறுசீரமைப்பு செய்ய அரசுக்குக் கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுவரை தகுதியான பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வழக்கம்போல 1,000 ரூபாய் விரைவில் நேரடியாக வரவு வைக்கப்படும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். இந்த அறிவிப்பு இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், அதே சமயம் இத்திட்டத்தில் கொண்டுவரப்படவுள்ள ‘மறுசீரமைப்பு’ குறித்த எதிர்பார்ப்புகளையும் விவாதங்களையும் மக்கள் மத்தியில் கிளப்பியுள்ளது.

   

கடந்த ஆட்சியில் இத்திட்டத்தின் கீழ் தகுதியற்ற பலர் பயன் பெற்று வந்ததாக எழுந்த புகார்களே இந்த மறுசீரமைப்பு முடிவுக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, பல வீடுகள் மற்றும் அதிக சொத்துக்கள் வைத்திருந்தும், அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்திச் சில குடும்பத் தலைவிகள் இத்தொகையைப் பெற்று வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பணக்காரர்களாக இருந்தும் வசதி படைத்த சில குடும்பங்கள் இத்திட்டத்தின் கீழ் பலன் அடைந்தது, உண்மையான ஏழை எளிய பெண்களுக்குச் சேர வேண்டிய உரிமையைத் தட்டிப் பறிப்பதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

   

அதே வேளையில், கணவனை இழந்த பெண்கள் மற்றும் முதியவர்கள் பெற்று வரும் மிகச்சிறிய அளவிலான ஓய்வூதியத்தைக் காரணம் காட்டி, சொந்த வீடே இல்லாத ஏழைப் பெண்களுக்கு இந்த உரிமைத் தொகை மறுக்கப்பட்டு வந்த நிலையும் நீடித்தது. எனவே, புதிய அரசின் மறுசீரமைப்பில் இத்தகைய குளறுபடிகள் களையப்பட்டு, தகுதியற்றவர்களைப் பட்டியலில் இருந்து நீக்கவும், தகுதியிருந்தும் புறக்கணிக்கப்பட்ட ஏழைப் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கவும் வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சொந்த வீடு இல்லாத வாடகை வீட்டில் வசிக்கும் ஏழைப் பெண்களுக்கு இந்தத் திட்டம் முழுமையாகச் சென்றடைவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.