Categories: சினிமா

1948-லே 4 கோடி ரூபாய் வசூலித்த ‘சந்திரலேகா’.. ஆனாலும் தயாரிப்பாளருக்கு பெரிய லாபமில்லையாம்.. ஏன் தெரியுமா?

Spread the love

தமிழ் சினிமாவை இந்திய அளவில் கொண்டு சென்றதில் மறைந்த ஜெமினி ஸ்டுடியோ அதிபர் வாசனுக்கு பெரும் பங்குண்டு. அவர் எடுத்த ஔவையார், சந்திரலேகா உள்ளிட்ட படங்கள் பிரம்மாண்டத்தால் ரசிகர்களை வாய்பிளக்க வைத்தன. அதிலும் சந்திரலேகா என்ற திரைப்படம் தமிழ்நாடு மட்டுமில்லாமல் இந்திய அளவில் பெற்ற வெற்றியை நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாது.

1945 வாக்கில் தொடங்கப்பட்ட சந்திரலேகா திரைப்படம் 3 ஆண்டுகள் உருவாக்கத்தில் இருந்தது. சுதந்திரம் கிடைத்த பின்னர் படம் 1948ம் ஆண்டு வெளி வந்தது.  முதலில் இந்த படத்தை இயக்குனர் வேறொரு இயக்குனரை ஒப்பந்தம் செய்தார் வாசன். ஆனால் அவர் எடுத்த படம் தனக்கு பிடிக்காததால் தானே இயக்க முடிவு செய்தார்.

இந்த படத்தில் முக்கிய நட்சத்திரங்களாக ரஞ்சன், டி.ஆர். ராஜகுமாரி, எம்.கே. ராதா, வி. என். ஜானகி, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், சுந்தரி பாய்  உட்பட பலர் நடித்திருந்தனர்.  படத்தின் பாடல்களுக்கு எஸ்.ராஜேஸ்வர ராவ் அவர்களும், காட்சிகளின் பின்னணிக்கு எம்.டி. பார்த்தசாரதி அவர்களும் இசையமைத்திருந்தனர்.

இந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சிக்கு முன்பாக வரும் ட்ரம்களின் மீதான குழு நடனமும், அட்டகாசமான சர்க்கஸ் காட்சிகளை படமாக்கிய விதமும் ரசிகர்களை சீட் நுனியிலேயே உட்கார வைத்தது. அதே போல ரஞ்சனின் வில்லத்தனமான நடிப்பு, டி.ஆர். ராஜகுமாரியின் கவர்ச்சிகரமான தோற்றம், என்.எஸ்.கிருஷ்ணன்-டி.ஏ.மதுரம் நகைச்சுவை காட்சிகளும் படத்தின் வெற்றியை உறுதி செய்தன.

தமிழக அளவில் சக்கைபோடு போட்ட இந்த திரைப்படத்தை இந்தியிலும் டப்பிங் செய்து வெளியிட்டார் எஸ் எஸ் வாசன். இந்தியா முழுவதும் திரையரங்குகள் மூலம் இந்த படம் அந்த காலத்திலேயே 4 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளது. ஆனால் இந்த படத்துக்காக வரியாகவே 1.25 கோடி ரூபாய் அளவுக்கு செலுத்த நேரிட்டதாக வாசன் ஒரு இடத்தில் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

வரி, திரையரங்க பங்கு மற்றும் விநியோகஸ்தர்களின் பங்கு போக சொற்பமான லாபமே தயாரிப்பாளரான தனக்கு கிடைத்ததாகவும் அவர் பதிவு செய்துள்ளார்.

vinoth

Recent Posts

“உங்க அப்பா அங்கேயே சுத்திட்டு இருக்காரு!”… இறந்த தந்தையின் ஆவியை ‘பார்சல்’ செய்ய வந்த குடும்பம்…கோட்டா மருத்துவமனையில் நடந்த அதிர வைக்கும் தாந்திரீக சடங்கு…!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…

5 மணத்தியாலங்கள் ago

“மனுஷன் பேசுறது நாய்க்கே புரியுதா?”… நாயுடன் அமர்ந்து ராஜு குமார் செய்த அலப்பறை… வயிறு குலுங்கச் சிரிக்கும் நெட்டிசன்கள்… வைரல் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…

5 மணத்தியாலங்கள் ago

“ஒரே ஒரு சின்ன தவறு.. அழகான புன்னகைக்கு ஆசைப்பட்டுமொத்த பற்களும் அவுட்!… துருக்கி பல் மருத்துவர் செய்த விபரீத… ஜாக்கியின் கண்ணீர் கதை”…!!!

அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…

6 மணத்தியாலங்கள் ago

“அந்த 500 ரூபாய்க்கு பதில் லட்சங்களில் உதவி!”… அழுதுகொண்டிருந்த மூதாட்டியின் கண்ணீரை துடைத்த சமூக வலைத்தளம்… நெஞ்சை நனைக்கும் வைரல் சம்பவம்…!!!

சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…

6 மணத்தியாலங்கள் ago

“காசு கொடுத்தாத்தான் 4 பேர் வரணும்!”… ராபிடோ ஓட்டுநரின் அடாவடி செயலால் நடுத்தெருவில் நின்ற குடும்பம்… மும்பையில் நடந்த பகீர் சம்பவம்… வைரல் வீடியோ…!!!

மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…

7 மணத்தியாலங்கள் ago

“எங்களுக்கும் இப்படி ஒரு சார் கிடைச்சிருக்கலாம்!”… மாணவர்களுடன் சேர்ந்து பாடி அசத்திய கிதார் ஆசிரியர்… நெட்டிசன்களின் மனதை நெகிழ வைத்த ஆசிரியர்…. இணையத்தை நனைக்கும் வைரல் வீடியோ…!!!

இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…

7 மணத்தியாலங்கள் ago