போபாலில் உள்ள எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனை வளாகத்திற்குள் அண்மையில் நடந்த சங்கிலி பறிப்புச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 25, 2026), மருத்துவமனையின் மகப்பேறியல் பிரிவில் உதவியாளராகப் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர், ரத்த வங்கிக்கு பின்னால் உள்ள மின்தூக்கியில் (Lift) தனியாகச் சென்றபோது இந்தத் துயரம் நிகழ்ந்தது. முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர், அந்தப் பெண்ணிடம் பேச்சு கொடுத்துத் திசைதிருப்பியுள்ளார். பின்னர் மின்தூக்கி மூன்றாவது தளத்தை அடைந்தவுடன், திடீரென அந்தப் பெண்ணைத் தள்ளிவிட்டு அவர் கழுத்தில் இருந்த தாலிச் சங்கிலியைப் (Mangalsutra) பறித்துக் கொண்டு படிக்கட்டுகள் வழியாகத் தப்பிச் சென்றுள்ளார்.
AIIMS भोपाल के अंदर का हाल।
महिला डॉक्टर से चेन छीनीं। दिल्ली से भोपाल तक इन दिनों घर और अस्पताल के अंदर ऐसी लूटपाट दिखने लगी है। pic.twitter.com/doihJI3Q30
— Narendra Nath Mishra (@iamnarendranath) January 26, 2026
