இன்றைய காலகட்டத்தில் செல்போன் பயன்படுத்தாத நபர்களை இருக்க முடியாது. ஒருவரின் செல்போன் எண் 10 இலக்கங்களில் இருப்பது பற்றி சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. மொபைல் எண்களுக்கான விதிகள் இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் தொலைதொடர்பு துறை ஆகியவற்றால் உருவாக்கப்பட்டது.
செல்போன் வந்த காலகட்டத்தில் பயனார்களை அடையாளம் காணவும், நெட்வொர்க்கில் பிரச்சனை வருவதை தடுக்கவும் செல்போன் எண்ணில் 10 இலக்கங்கள் இருக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. முதல் இலக்கம் எப்போதும் 9, 8, 7, 6 ஆகிய எண்களில் தொடங்கும். அது அந்த செல்போன் எண் எந்த நெட்வொர்க்கிற்கு சொந்தமானது என்பதை குறிக்கும்.
10 இலக்க எண்கள் இருந்தால் அதை வைத்து 100 கோடி வெவ்வேறு எண் சேர்க்கைகளை உருவாக்க முடியும். 8 இலக்கங்கள் இருந்தால் குறைந்த எண்ணிக்கையிலான எண்களை மட்டுமே உருவாக்க முடியும். இதனால் எதிர்காலத்தில் எண்களின் பற்றாக்குறை ஏற்படும். அதுவே 12, 13 இலக்கங்கள் இருந்தால் அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள சிரமமாக இருக்கும்.
அதனால் தான் 10 இலக்கங்களில் மொபைல் எண்கள் அமைந்திருக்கும். ஒவ்வொரு செல்போன் எண்ணும் ஒரு நபரின் டிஜிட்டல் அடையாளமாக கருதப்படுகிறது. ஓடிபி, வங்கி பரிவர்த்தனை அறிவிப்புகள் என எதுவாக இருந்தாலும் செல்போன் எண்ணை அடிப்படையாகக் கொண்டது. இதனால் உலகின் பல்வேறு நாடுகளும் 10 இலக்க எண்களை ஏற்றுக் கொண்டு பின்பற்றி வருகிறது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…