அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை (MLA) தமிழக வெற்றிக் கழகத்தினர் (தவெக) விலைக்கு வாங்க முயல்வதாக எழுந்துள்ள புகார் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சிபிஐ (CBI) விசாரணை கோரப் போவதாக அதிமுக மூத்த நிர்வாகி அக்ரி கிருஷ்ணமூர்த்தி அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
விசிகவிலிருந்து விலகியபோது அதிமுகவில் இணைவதற்காகப் பேரம் பேசியவர்தான் இந்த ஆதவ் அர்ஜுனா என்று விமர்சித்துள்ள அவர், தவெகவில் தற்போது N.ஆனந்துக்கும் ஆதவ் அர்ஜுனாவுக்கும் இடையே கடுமையான அதிகார மோதல் நிலவி வருவதாகக் குற்றம்சாட்டியுள்ளார். தங்களுக்குள் யார் பெரியவர் என்பதைக் காட்டுவதற்காகவே அதிமுகவினரை இழுக்க தவெக தரப்பில் இத்தகைய ‘குதிரை பேரம்’ நடத்தப்படுவதாகவும், அதிமுகவினரை தவெக குறிவைப்பது ஏன் என்றும் அவர் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
