இளம்பெண்ணுக்கு பாலியல் சீண்டல்… “மஞ்சுமல் பாய்ஸ்” பட இயக்குனர் மீது வழக்குபதிவு… அதிர்ச்சியில் திரையுலகம்…!!

By Soundarya on பங்குனி 2, 2026

Spread the love

மலையாளத் திரையுலகில் பெரும் வெற்றி பெற்ற ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படத்தின் இயக்குநர் சிதம்பரம் மீது பாலியல் சீண்டல் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொச்சியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில், எர்ணாகுளம் டவுன் சவுத் காவல்துறையினர் இந்தப் புகாரைப் பதிவு செய்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சந்திப்பின் போது, இயக்குநர் சிதம்பரம் தனக்கு பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்ததாகவும், அநாகரீகமாக நடந்துகொண்டதாகவும் அந்தப் பெண் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். மலையாளத் திரையுலகில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்து ஆராய்ந்த ‘ஹேமா கமிட்டி’ அறிக்கை வெளியான பிறகு, அடுத்தடுத்து முன்னணி இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் மீது புகார்கள் குவிந்து வரும் நிலையில், இந்த விவகாரம் மீண்டும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கில் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டப்பிரிவுகளின் கீழ் இயக்குநருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை (FIR) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் மீது பணமோசடி தொடர்பான புகார்கள் இருந்து வந்த நிலையில், தற்போது அதன் இயக்குநர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது அந்தத் திரைப்படக் குழுவினருக்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தைப் பெற்றுள்ள காவல்துறையினர், இது தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மலையாளத் திரைத்துறை சங்கங்கள் இந்த விவகாரத்தில் என்ன மாதிரியான முடிவுகளை எடுக்கும் என்பதைப் பொறுத்தே சிதம்பரத்தின் எதிர்காலத் திரைப்படத் திட்டங்கள் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.