இமாச்சலப் பிரதேசத்தின் சிந்த்பூர்ணி பகுதியில் மலைப்பாதையில் சென்ற கார் ஒன்று திடீரென நிலைதடுமாறி பாதாளத்தில் விழுந்து கோர விபத்துக்குள்ளானது. மலைப் பிரதேசங்களில் மிக கவனமாகவும் மெதுவாகவும் வாகனம் ஓட்ட வேண்டும் என்பதற்குச் சான்றாக அமைந்த இந்தத் துயரச் சம்பவத்தில், காரில் பயணம் செய்த இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒரு சிறிய கவனக்குறைவு சில நொடிகளில் எத்தகைய பெரும் அழிவைத் தரும் என்பதற்கு இந்த விபத்து ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
விபத்து நடந்த அந்த ஆபத்தான வளைவுகளில் போதிய தடுப்பு வேலிகள் (Barriers) இல்லாததே உயிரிழப்பிற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. ஒருவேளை அங்கு பாதுகாப்புச் சுவர்கள் இருந்திருந்தால், கார் பள்ளத்தில் விழுவதைத் தடுத்து அந்த இரண்டு உயிர்களையும் காப்பாற்றியிருக்கலாம் எனப் சமூக வலைதளங்களில் ஆதங்கம் எழுந்து வருகிறது. இந்த விபத்து குறித்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், மலைச் சாலைகளில் பயணிக்கையிலாவது பாதுகாப்பு விதிகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
Horrific… this is exactly why it’s said to drive slow in the hills, because one small mistake can turn into something devastating in seconds. A car fell into a deep gorge, and 2 lives were lost. Wish there were barriers, maybe those lives could have been saved.
📍 Chintapurni… pic.twitter.com/Bes2gAACqO
— Nikhil saini (@iNikhilsaini) April 29, 2026
