நல்ல மனசோடு கேப்டன் செஞ்ச அந்த ஒரு விஷயம்.. ஓகோன்னு முன்னேறிய சரத்குமார்…!

By Soundarya on மார்கழி 6, 2024

Spread the love

சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் 1954ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்தவ.ர் பிஎஸ்சி மேக்ஸ் படிப்பதற்காக சென்னைக்கு வந்தவர். 1974 ஆம் ஆண்டு தனது 20 வயதில் சென்னை ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு மிஸ்டர் மெட்ராஸ் என்ற பட்டத்தையும் வென்றார். பின் நாட்களில் பெங்களூருவில் தினகரன் பத்திரிக்கையில் விநியோகம் மேலாளராகவும், செய்தியாளராகவும் இருந்து வந்த சரத்குமார் கண் சிமிட்டும் நேரம் என்கிற படத்தை தயாரித்து இன்ஸ்பெக்டராக ஒரு சிறு வேடத்தில் நடித்தார்.

   

அதன் பின் நாட்களில் சொந்த படங்களை எடுத்து தோல்வியும் கண்டார். அதன்பின் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் மட்டுமே அவருக்கு கிடைத்தது சரத்குமாரின் கஸ்டமான சூழ்நிலைகளை புரிந்து கொண்டு புலன் விசாரணை திரைப்படத்தில் வில்லனாக அறிமுகப்படுத்தி வைத்தார் விஜயகாந்த். தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து வந்தார் விஜயகாந்த்.

   

 

அவர் நடித்த நூறாவது திரைப்படமான கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரியாகவும் தனது நண்பராகவும் சரத்குமாரை அந்த திரைப்படத்தில் நடிக்க வைத்தார். அதன் பிறகு அவர் கதாநாயகனாக நடித்து வெற்றி பெற்றார் என்பது குறிப்பிட த்தக்கது. அதன்பின்னர் சரத்குமார் கடந்த 1986-ஆம் ஆண்டு ரிலீசான சின்ன பூவே மெல்ல பூவே பேசு என்ற படத்தில் நடித்து திரை உலகை தனது பயணத்தை ஆரம்பித்தார்.

#image_title

ஆரம்பத்தில் வில்லனாக நடித்த சரத்குமார் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தார். 90-ஸ் காலகட்டத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் தேவயானி. இவர் அஜித், விஜய், சரத்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார். தேவயானியும் சரத்குமாரும் இணைந்து நடித்த சூர்யவம்சம் படம் சூப்பர் ஹிட் ஆனது.