இந்திய சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள்தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவருக்கும் நடிகர் தனுஷிற்கும் கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது .இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்று இரண்டு மகன்கள் உள்ளனர்.
இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கையை முடிவு கொண்டு வருவதாக அறிவித்தது திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனுஷ் உடன் விவாகரத்து அறிவிப்பு வெளியிட்ட பின் நீண்ட நாட்களுக்குப் பிறகு தயாரிப்பில் இறங்கியுள்ளார் .
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில கோப்புகள் அடங்கிய புகைப்படத்தை பகிர்ந்து,அதில் ‘காகிதத்தில் கதை எழுதுவது ஒரு உணர்வு. கதையின் பரிணாமம் என்பது முதலில் எழுதுவது, இரண்டாவது தட்டச்சு செய்வது அதன் பின் சில மாற்றங்களை சேர்ப்பது என்பதாகும்.
காலப்போக்கில் நாம் தட்டச்சு செய்த பதிப்பை பார்க்கும் பொழுது அதில் இருந்து ஒரு தாளை கூட தூக்கி எறிய மனம் வராது. ஒவ்வொரு தடவையும் அதை நீங்கள் படிக்கும் போது புதிதாக ஏதாவது உங்களுக்கு தோன்றும். அதனை மேலும் விரிவாக்கவே நாம் விரும்புவோம்’ என்று அவர் பதிவில் குறிப்பிட்டுள்ளார் .ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
View this post on Instagram