இஞ்சியை அதிகமா உணவில் எடுத்துக் கொண்டால் இவ்வளவு ஆபத்துக்கள் இருக்கா?.. அட இத்தனை நாள் இந்த விஷயம் தெரியாம போச்சே…!

By Divyamayakannan on புரட்டாதி 1, 2025

Spread the love

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். நாம் தினமும் காலையில் குடிக்கும் டீயில் இருந்து உணவுப் பொருட்களிலும் இஞ்சி சேர்ப்போம் . இஞ்சி சேர்த்த உணவை சாப்பிடுவதினால் அஜீரணம், வீக்கம், உடல் பருமன் இதுபோன்ற பல பாதிப்புகளை போக்கு உதவுகிறது. அதேபோல் அதிக அளவில் இஞ்சி சாப்பிட்டால் என்னென்ன ஆபத்துகள் வரக்கூடும் என்று இந்தப் பதிவில் பார்க்கலாம்.

ஆய்வின்படி தினமும் 5 கிராமுக்கு மேல் இஞ்சியை உட்கொண்டால் நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு வரக்கூடும். பொதுவாகவே இஞ்சி என்பது மருத்துவ குணத்தை கொண்டது. உடம்பில் ஏற்படும் அலர்ஜிகளை தடுக்கும். மாரடைப்பு மற்றும் பக்கவாத நோய் அபாயத்தை குறைக்கும். ஆனால் இஞ்சியை அதிகமாக உட்கொள்ளும் போது ரத்தம் மெலிந்து போகும் அபாயம் ஏற்படலாம். பொதுவாக செரிமானத்திற்கு நல்லது ஆனால் அதிகம் உட்கொண்டால் வயிற்றுப் பிரச்சனை வரக்கூடும். ரத்த சக்கரை மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். அதிகம் உட்கொண்டால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை குறைத்து, இரத்த சக்கரை குறைவு நோய் வரலாம்.

   

அலர்ஜி முதல் சுவாசிப்பில் சிரமம் இது போன்ற பிரச்சனை வந்தால் அலட்சியமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. உடனடியாக இஞ்சி உட்கொள்வதை நிறுத்திவிட்டு மருத்துவர் ஆலோசனை எடுத்துக் கொள்ள வேண்டும். முக்கியமான ஒன்று கர்ப்ப காலத்தில் பெண்கள் வாந்தியை கட்டுப்படுத்துவதற்காக இஞ்சியை உட்கொள்வார்கள். தவறி கூட இது போன்ற தவறுகளை செய்து விடாதீர்கள். வயிற்றில் உள்ள குழந்தை இல்லாமல் போகலாம், வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படலாம் என்று அமெரிக்கா தேசிய மருத்துவர் நூலகத்தின் அறுக்கையில் உள்ளது. கர்ப்ப காலத்தில் மருத்துவரை ஆலோசித்து இஞ்சியை உட்கொள்ளலாம்.