ஓசூர், டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவன பெண்கள் விடுதியின் கழிவறையில் ரகசிய கேமரா பொருத்திய பெண் பணியாளரை போலீசார் கைது செய்துள்ளனர். விடியல் விடுதியின் எட்டாவது பிளாக்கில் உள்ள குளியல் அறையில் தான் இந்த அவலம் அரங்கேறியுள்ளது. கேமராவில் பதிவான காட்சிகளை அந்த பெண் பணியாளர் தன்னுடைய நண்பர்கள் மூலமாக விற்பனை செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் தற்போது தமிழக முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
