“உங்களுக்கு யார் சொன்னது?”…. செய்தியாளரை திகைக்க வைத்த செங்கோட்டையன்…. முதல்வர் லண்டன் லேண்டிங்கிற்குப் பின் காத்திருக்கும் திருப்பம்….!

By Nanthini on புரட்டாதி 11, 2026

Spread the love

திருவாரூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மூத்த அரசியல்வாதியும் தவெக அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையனிடம், “அமைச்சரவை மாற்றப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகிறதே?” என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, சிரித்துக்கொண்டே “உங்களுக்கு யார் சொன்னது?” எனப் பிடிகொடுக்காமல் பதிலளித்துவிட்டு அவர் அங்கிருந்து புறப்பட்டார்.

முதல்வர் விஜய் லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பியுள்ள நிலையில், இந்தச் செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் பலவிதமான யூகங்களையும் ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் முக்கிய முடிவுகளில் மூத்த தலைவரின் இந்தத் திடீர் மௌனமும் சுருக்கமான பதிலும், லண்டன் பயணத்திற்குப் பின் கட்சி மற்றும் நிர்வாக அளவில் மாற்றங்கள் வரக்கூடும் என்ற விவாதத்திற்கு மேலும் வலுசேர்த்துள்ளது.