இபிஎஸ்-க்கு கெடு விதிக்கும் சி.வி.சண்முகம்..? அதிமுக-வில் உச்சகட்ட பரபரப்பு.. தவெக கூட்டணியால் அதிரும் அரசியல் களம்..!!

By Soundarya on வைகாசி 6, 2026

Spread the love

தமிழக அரசியலில் நிலவும் தற்போதைய பரபரப்பான சூழலில், அதிமுக-வின் மூத்த தலைவர்களான சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் இன்று (மே 6) மாலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்க உள்ளனர். தற்போது சி.வி. சண்முகத்தின் இல்லத்தில் இருவரும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கூட்டணி அமைத்து ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுக்க வேண்டும் என்பதை இபிஎஸ்-யிடம் இவர்கள் வலியுறுத்த உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சந்திப்பின் போது, தவெக-வுடன் கூட்டணி அமைப்பதற்கு எடப்பாடி பழனிசாமி உடன்படாத பட்சத்தில், அவருக்கு ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவை (கெடு) விதிக்கவும் இவர்கள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தேர்தலுக்குப் பிந்தைய இந்த அதிரடி நகர்வுகள் அதிமுக-வுக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சி.வி. சண்முகத்தின் இந்த அழுத்தமான முடிவு, அதிமுக-வின் எதிர்கால நிலைப்பாட்டையும் தமிழகத்தின் புதிய ஆட்சி அமைப்பையும் தீர்மானிக்கும் முக்கிய காரணியாகப் பார்க்கப்படுகிறது.