தமிழகத்தில் பரபரப்பு… இரவோடு இரவாக 1000 பேர் பணி நீக்கம்… தவெக அமைச்சரும் அதிர்ச்சி..!!

By Soundarya on ஆனி 9, 2026

Spread the love

TNSTC சேலம் மண்டலத்தில் ஒரே நாளில் 1,000-க்கும் மேற்பட்ட தற்காலிகப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் அதிரடியாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு முதல் ஒப்பந்த மற்றும் தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்து வரும் தங்களை, எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இரவோடு இரவாகப் பணியில் இருந்து நீக்கியதாகப் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டு கண்ணீர் மல்கப் புகார் மனு அளித்துள்ளனர்.

இந்தக் கொத்துக்கொத்தான பணிநீக்கச் சம்பவம் தற்போதைய தவெக அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழன் பார்த்திபனுக்கே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து அவரிடம் கேட்டபோது, இந்தத் திடீர் பணிநீக்க நடவடிக்கை தனக்கே அதிர்ச்சியளிப்பதாகக் கூறியுள்ள அவர், தொழிலாளர்களின் இந்த நிலைமை குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டுத் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார். இருப்பினும், ஒரே நாளில் 1,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையிழந்த விவகாரம் தவெக அரசுக்கு நிர்வாக ரீதியாகப் புதிய நெருக்கடியை உருவாக்கியுள்ளது.