சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் ஏராளமான வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில் அதில் ஒரு சில வீடியோக்கள் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் இருக்கும். அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. உத்திரபிரதேச மாநிலம் புலந்த்ஷெஹர் மாவட்டத்தில் நடைபெற்ற திருமண விழாவில் சப்பாத்தி தயாரிக்கும் பணியிலிருந்து டேனிஷ் என்ற நபர் ரொட்டியின் மீது எச்சில் துப்பியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனை அருகில் இருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். சில நிமிடங்களில் அந்த வீடியோ வைரலாகி பொதுமக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது.
இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து போலீசார் சம்பவத்தை தீவிரமாக விசாரித்தனர். இதனைத் தொடர்ந்து அந்த நபர் கைது செய்யப்பட்டார். உத்திரபிரதேச மாநிலத்தில் இப்படி ஒரு சம்பவம் நிகழ்வது முதல் முறையல்ல. கடந்த ஆகஸ்ட் மாதம் கூட சாலையோர உணவகத்தில் ரொட்டி தயாரிக்கும் போது எச்சில் துப்பிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அடுத்து மே மாதத்திலும் இப்படி ஒரு சம்பவம்தான் நடந்தது. சமூக வலைத்தளத்தில் இந்த வீடியோ பரவியதன் மூலமாக குற்றவாளிகள் விரைவாக கைது செய்யப்படுவார்கள் என தெரிகிறது. மேலும் இந்த வீடியோ பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Another case of “Thook Jihad” has come to light in Bulandshahr, UP, where a person making rotis at a Dalit wedding ceremony is seen spitting on the roti. The police have arrested the person.
The accused’s name is Danish. pic.twitter.com/5PMnpOvpK1
— Megh Updates 🚨™ (@MeghUpdates) November 4, 2025
