இந்திய தொலைத்தொடர்பு துறையில் ஜியோ ஏர்டெல்லுக்கு இடையேக் கடும் போட்டி நிலவி வருகிற நிலையில். பிஎஸ்என்எல் மீண்டும் இரு நிறுவனங்களுக்கும் போட்டியாக வரவுள்ளது. ஜியோ, ஏர்டெல் இந்த இரு நிறுவனங்களுக்கும் பெரும் தலைவலியை கொடுக்கப் போகிறது பிஎஸ்என்எல் நெட்வொர்க். BSNL தற்போது 4G சேவையை விரிவுபடுத்தவும் , வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு நெட்வொர்க் மற்றும் டேட்டாக்களை வழங்க ரூபாய் 47 கோடி முதலீடு செய்துள்ளது.
இதில் BSNL 1 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தை அறிவித்துள்ளது. ஆத்மநிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் BSNL ரூபாய் 47,000கோடி முதலீடு செய்யப் போகிறது. இதன் மூலம் நாட்டின் எந்த மூளை முடக்கில் இருந்தாலும் 4ஜி நெட்வொர்க் எந்த ஒரு தடையில்லாமல் டேட்டா சேவைகளை பயன்படுத்தலாம் என்று தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். 1 லட்சம் 4G BSNL தவறுகளை நாடு முழுவதும் அமைக்க உள்ளன. இதன் பணிகள் நடைபெற்று வருகிறது.
4G மற்றும் இல்லாமல் 5G சேவைகளை குறித்து கூடிய விரைவில் வளர்ச்சி ஏற்படும் என்று ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார். BSNL ஏற்கனவே குறிப்பிட்ட காலத்திற்கு freedom offer – ஐ அறிவித்துள்ளது. இது மட்டும் இல்லாமல் ஒரு ரூபாய் ரீசார்ஜ் செய்தால் தினமும் 2GB டேட்டா (4G ), 100 SMS , வரம்பற்ற உள்ளூர் அழைப்புகள் என பல சலுகைகள் வழங்குகிறது. BSNLன் அறிவிப்பு ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்கு பெரும் அவதியாக அமைந்துள்ளது.
