மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளம்பெண் ஒருவரை வரவழைத்து, மது புகட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வேலை தேடித்தருவதாக ஆசை வார்த்தை கூறி, இரண்டு இளம்பெண்கள் அவரை போபாலுக்கு வரவழைத்துள்ளனர்.
அங்கு அந்தப் பெண்கள் தங்கியிருந்த அறைக்குச் சென்றபோது, பாதிக்கப்பட்ட பெண்ணை வலுக்கட்டாயமாக பீயர் குடிக்க வைத்துள்ளனர். அவர் நிலைகுலைந்த தருணத்தைப் பயன்படுத்தி, அங்கிருந்த இரண்டு இளைஞர்களுக்கு அந்தப் பெண்ணை இரையாக்கியுள்ளனர். அந்த காமக் கொடூரன்கள் சுமார் 6 மணி நேரம் அந்தப் பெண்ணை மாறி மாறி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
தொடர் சித்திரவதையால் அந்தப் பெண் மயக்கமடைந்ததைத் தொடர்ந்து, குற்றவாளிகள் அவரை அங்கேயே கைவிட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். பின்னர் இது குறித்துப் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, விரைந்து செயல்பட்ட போபால் போலீசார், சதித் திட்டம் தீட்டிய இரண்டு பெண்கள் மற்றும் வன்கொடுமையில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்கள் என மொத்தம் நான்கு பேரையும் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். நடுங்க வைக்கும் இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டம் - ஒழுங்கைப் பாதுகாத்து பொதுமக்களுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டிய காவல்துறையினரே, போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் முத்தமிட்டு, கட்டிப்பிடித்து ‘ரொமான்ஸ்’…
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிந்து ஒருவழியாகப் புதிய ஆட்சி அமைந்துள்ள நிலையிலும், அரசியல் களம் அதற்குள்ளாகவே அடுத்த பரபரப்பிற்குத் தயாராகிவிட்டது.…
அவந்திகா தன் கணவர் ரவியுடன் ஒரு சாதாரண, அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தாள். ரவி மொபைல் கடை நடத்தி வந்ததால்,…
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமையும், 'திரைக்கதை மன்னன்' என்று போற்றப்படுபவருமான நடிகர் மற்றும் இயக்குநர் கே. பாக்யராஜ் (வயது…
மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே உள்ள லோகாத் கோட்டையில் தொழிலதிபர் கேதன் அகர்வால் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் நாடு…
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் (73) இன்று மாரடைப்பு காரணமாக சென்னையில் காலமானார். திடீர் மாரடைப்பு ஏற்பட்டதைத்…