ஐயோ மனசாட்சியே இல்லையா?… சாலையில் நிர்வாணப்படுத்தி அடித்த கொடூரம்… பட்டப் பகலில் நடந்த பயங்கரம்… ஷாக்கிங் வீடியோ…!

By Nanthini on தை 6, 2026

Spread the love

டெல்லியின் லட்சுமி நகரில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் ராஜேஷ் கார்க் என்பவர் வாழ்ந்து வருகின்றார். கடந்த ஜனவரி 2-ம் தேதி அதிவேகமாக வந்த ஒரு தார் வாகனம் அவர் வீட்டுக்கு வெளிப்புறமுள்ள சுற்றுச்சூழலின் மீது மோதியுள்ளது. பிறகு அந்த வாகனத்திலிருந்து இறங்கி வந்த பல நபர்கள் கார்க் மற்றும் அவருடைய மகனை தாக்கியுள்ளனர். அப்போது அந்த இடத்திற்கு இரு சதுர வாகனத்தில் வந்த இரண்டு நபர்களும் சேர்ந்து அவர்களை கொடூரமாக தாக்கினார். மகன் வீட்டுக்கு வெளியே இழுத்துச் செல்லப்பட்டு தாக்கப்பட்டது மட்டுமல்லாமல் துணி அனைத்தும் கலற்றப்பட்டு நிர்வாணமாக்கப்பட்டார்.

பட்டப் பகலில் நடந்த இந்த கொடூர சம்பவத்தின் போது சுற்றி இருந்தவர்களும் இதனை தடுக்க முயற்சி செய்யாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். காட்சிகள் அனைத்தும் அருகில் இருந்த சிசிடிவியில் பதிவாகி இருந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் தாக்குதலுக்கு உள்ளானவர்களை காப்பாற்ற உதவவில்லை என தெரிகிறது. ஒரு காவலர் தாக்குதலுக்கு உள்ளான மகனின் உடலை மறைக்க உதவுவதும் அந்த காட்சியில் தெரிகின்றது.

   

ராஜேஷின் வீட்டில் இயங்கி வரும் ஒரு உடற்பயிற்சி கூடம் தொடர்பான சொத்து தகராறு இந்த சம்பவத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்ட சதீஷ் யாதவ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். பட்டப் பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.