“அய்யோ என் பொண்டாட்டியை காணோம்”… மனைவி உடலை சிமெண்ட் பெட்டிக்குள் மறைத்த ‘சைக்கோ’ கணவன்… உள்ளே பார்த்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!

By Nanthini on சித்திரை 28, 2026

Spread the love

சூரத் நகரில் உணவியல் நிபுணராகப் பணியாற்றி வந்த ஷில்பா சால்வி என்பவர், தனது கணவராலேயே கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு, சிமெண்ட் கலவையுடன் மரப்பெட்டியில் அடைக்கப்பட்டிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் தனது மனைவியைக் காணவில்லை என 40 வயதான விஷால் சால்வி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கிய நிலையில் விஷால் திடீரெனத் தலைமறைவானார். இந்தத் திருப்பம் காவல்துறையினருக்கு அவர் மீது சந்தேகத்தை வலுப்படுத்தியது.

விஷால் தலைமறைவான பிறகு, அவரது மகன் ஒரு கடிதத்தைக் கண்டெடுத்தார். அதில், தனது மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் ஏற்பட்ட மன உளைச்சலில் தாமே இந்தக் கொலையைச் செய்ததாகவும், ஷில்பாவின் உடல் சலாபத்புராவில் உள்ள தங்களது பூர்வீக வீட்டில் இருப்பதாகவும் விஷால் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்தார். 2010-ல் திருமணமான இத்தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், சமீபகாலமாக இவர்களுக்குள் ஏற்பட்ட குடும்பத் தகராறே இந்த விபரீத முடிவுக்குக் காரணமாக அமைந்துள்ளது.

   

அந்தக் கடிதத்தின் அடிப்படையில் காவல்துறையினர் குறிப்பிட்ட அந்தப் பாழடைந்த வீட்டைச் சோதனை செய்தபோது, அங்கு புதிதாக சிமெண்ட் பூசப்பட்ட ஒரு மர்மமான மரப்பெட்டியைக் கண்டனர். அந்தப் பெட்டியைத் திறந்தபோது, அழுகிய நிலையில் ஷில்பாவின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. உடலிலிருந்து வரும் துர்நாற்றத்தை மறைப்பதற்காக விஷால் நுரை மற்றும் சிமெண்ட் கலவையைப் பயன்படுத்தி உடலை மறைக்க முயன்றது விசாரணையில் தெரியவந்தது. மருத்துவப் பரிசோதனையில் அவர் நான்கு நாட்களுக்கு முன்பே கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

   

வைரம் பட்டை தீட்டும் தொழிலாளியான விஷால், கடந்த சில ஆண்டுகளாக வேலை இல்லாமல் இருந்துள்ளார். அதே சமயம் ஷில்பா மாநகராட்சி மருத்துவமனையில் உணவியல் நிபுணராகப் பணியாற்றியதுடன் சொந்தமாக கிளினிக் ஒன்றையும் நடத்தி வந்துள்ளார். இந்த பொருளாதார இடைவெளியும், சந்தேகமும் ஒரு கொடூரமான குற்றத்திற்கு வழிவகுத்துள்ளது. தலைமறைவாக இருந்த விஷாலைப் புறநகர்ப் பகுதியில் வைத்துக் கைது செய்த காவல்துறையினர், அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.