பரபரப்பு..! உயிருக்குப் பயந்து ஹெல்மெட்.. அப்படி இருந்தும் 3-வது முறையாக கொலை முயற்சி..? பாஜக பெண் எம்.எல்.ஏ மீது கொடூர தாக்குதல்..!!

By Soundarya on சித்திரை 24, 2026

Spread the love

மேற்கு வங்க சட்டசபை தேர்தலின் போது (ஏப்ரல் 23, 2026), பாஜக எம்.எல்.ஏ அக்னிமித்ரா பால் (Agnimitra Paul) மூன்றாவது முறையாகத் தாக்கப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதல் அபாயம் இருப்பதை உணர்ந்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாகத் தேர்தல் நாளன்று அவர் ஹெல்மெட் அணிந்து வலம் வந்த நிலையில், இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அக்னிமித்ரா பால் தனது காரில் சென்று கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் பெரிய பாறை ஒன்றை அவர் மீது வீசியுள்ளனர். இதில் அவர் பயணித்த இனோவா காரின் பின் பக்கக் கண்ணாடி முழுமையாகச் சிதறியது. “நாங்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறத் தயாரானபோது திடீரென ஒரு பெரிய கல் வந்து காரின் பின் பகுதியில் மோதியது” என்று அவர் அச்சத்துடன் தெரிவித்தார். அதிர்ஷ்டவசமாக இந்தத் தாக்குதலில் அவர் காயமின்றி உயிர் தப்பினார்.

   

மேற்கு வங்கத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவின் போது ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்கள் வெடித்தன. குறிப்பாகத் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்களிடையே கடும் மோதல் நிலவியது. தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஏற்கனவே புகார் அளித்திருந்த அக்னிமித்ரா பால், திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்களே இந்தத் தாக்குதலை நடத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாகத் தேர்தல் ஆணையம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.