உத்திரபிரதேசம் மாநிலத்தில் வசித்து வரும் வீரேந்திரா(40) என்பவருடைய இளைய சகோதரர் சுனில். இதனிடையே சுனிலின் மகள், வீரேந்திரா வீட்டின் முன்பு குப்பையை கொட்டியுள்ளார். இதனை கவனித்த அவர் கண்டித்துள்ளார். இது பற்றி தெரிந்ததும் சுனில் தன்னுடைய அண்ணனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டபோது ஆத்திரமடைந்த சுனில் வீட்டிலிருந்து கோடாரியை எடுத்து வந்து வீரேந்தராவை கடுமையாக தாக்கியுள்ளார். அப்போது சுனிலியின் மனைவி கம்புகளால் தாக்கியுள்ளார்.
இதில் பலத்த காயம் அடைந்த வீரேந்தரா உடனடியாக மீட்க பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் முதல் கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு உயர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி வீரேந்திரா மனைவி சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீசில் புகார் அளித்த நிலையில் தற்போது போலீசார் அவர்களை தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள். ஒரு குப்பை சண்டைக்காக சொந்த அண்ணனையே தம்பி வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
