தனது மூன்று சகோதரிகளின் AI ஆல் உருவாக்கப்பட்ட ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களைக் காட்டி மிரட்டியதால் 19 வயது கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினரின் கூற்றுப்படி, டிஏவி கல்லூரியில் இரண்டாம் ஆண்டு B.COM படிக்கும் ராகுல், தனது குடும்பத்துடன் பாசெல்வா காலனியில் வசித்து வந்தார். மிரட்டலால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவர், சனிக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு ராகுலின் மொபைல் போனை யாரோ ஹேக் செய்ததாக குடும்பத்தினர் தங்கள் புகாரில் தெரிவித்துள்ளனர். தொலைபேசியை ஹேக் செய்த பிறகு, சிலர் ராகுல் மற்றும் அவரது மூன்று சகோதரிகளின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை AI மூலம் உருவாக்கினர். அவர்கள் இந்த போலி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வாட்ஸ்அப் மூலம் அனுப்பி, ராகுலிடமிருந்து ரூ.20,000 பணம் கேட்டதாக அவரது தந்தை மனோஜ் பாரதி குற்றம் சாட்டினார். பணம் கொடுக்கவில்லை என்றால், வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வைரலாக்கிவிடுவோம் என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் ராகுலை மிரட்டினர். இந்த மிரட்டலால் ராகுல் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானதால் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
