திருமண இரவன்று மணமகள், “எனக்கு மாதவிடாய் வந்துவிட்டது, நாம் காலையில் பார்த்துக் கொள்ளலாம்” என்று கூறினாள். அதை நம்பி மணமகன் நிம்மதியாக உறங்கினான். ஆனால், அந்த இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்ட மணமகள், வீட்டில் இருந்த நகைகள் மற்றும் ரொக்கப் பணத்துடன் நைசாக அங்கிருந்து தப்பியோடினாள்.
ராகுல் குமார் என்பவருக்கும், அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ராணி குமாரி என்ற பெண்ணுக்கும் தான் இந்த திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமணத்தில் மணமகன் வீட்டார் வரதட்சணையாக ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை. ஆனால், அதற்கு நேர்மாறாக, மணமகள் தன் காதலனுடன் சேர்ந்து ஒட்டுமொத்த குடும்பத்தின் நகைகளையும், பணத்தையும் கொள்ளையடித்துக் கொண்டு ஓடிவிட்டாள்.
பொதுவாக திருமணத்திற்குப் பிறகு முதலிரவைக் கொண்டாட அனைவரும் ஆசைப்படுவார்கள். ஆனால், அந்தப் புனிதமான தருணத்தைக் கூட ஒரு சாக்காகப் பயன்படுத்தி, மணமகன் தூங்கிய பின் மணமகள் தனது திட்டத்தை அரங்கேற்றியது ஒட்டுமொத்த குடும்பத்தினரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
