தலைநகர் சென்னையில் நிலவி வரும் கடும் மின்வெட்டுப் பிரச்சினை, முதலமைச்சர் விஜய்க்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. குறிப்பாக, கொளத்தூர் பகுதியில் நள்ளிரவில் சுமார் 4 மணி நேரம் வரை தொடர்ச்சியாக மின்சாரம் துண்டிக்கப்படுவதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், கோடை வெப்பத்தைத் தாங்க முடியாமல் நள்ளிரவிலேயே வீதிகளில் இறங்கி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோடைகாலத்தில் மின்சாரம் இல்லாததால் இரவு நேரங்களில் தூங்க முடியாமல் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கடுமையாக அவதிப்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த மின்வெட்டு விவகாரம் அரசியல் ரீதியாகவும் பொதுமக்கள் மத்தியிலும் பூதாகரமாக வெடிப்பதற்குள், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து நிலைமையை உடனடியாக சீரமைக்குமாறு அதிகாரிகளுக்கு அரசு தரப்பில் இருந்து அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் ‘அம்மா மருந்தகங்களில்’ முதலமைச்சர் விஜய்யின் புகைப்படங்களை வைக்க வேண்டும் என்று அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர்…
கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த…
கர்நாடகாவைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரரான லோகேஷ் அக்ஷய் (39), மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோதே திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக…
விசிக கட்சியின் முக்கிய நிர்வாகியும் மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷா நவாஸ் திமுகவில் இணையவுள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு…
தமிழக வருவாய்த் துறை அமைச்சர் K. A. செங்கோட்டையன் காய்ச்சல், வாந்தி மற்றும் மயக்கம் காரணமாக கோவையில் உள்ள ஒரு…
கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்துவது தவிர்க்க முடியாத ஒன்று என்று…