BREAKING: தமிழ்நாட்டை உலுக்கிய கிட்னி திருட்டு… முதல்வர் விஜய்யின் ஒற்றை உத்தரவு.. அடுத்து நடக்கப்போவது என்ன…?

By Nanthini on வைகாசி 20, 2026

Spread the love

தமிழ்நாட்டை உலுக்கிய பிரபல மருத்துவமனைகளின் சட்டவிரோத சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மற்றும் மாற்றுத்திறனாளிகள், ஏழைத் தொழிலாளர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட கிட்னி திருட்டு விவகாரத்தை, தமிழகத்தின் புதிய தவெக (தமிழக வெற்றிக் கழகம்) அரசு தற்போது தீவிரமாகக் கையில் எடுத்துள்ளது. முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் நாமக்கல், திருச்சி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் அரங்கேறியதாகக் கூறப்படும் இந்த மனிதாபிமானமற்ற மோசடி குறித்து பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், தற்போதைய முதலமைச்சர் விஜய்யின் நேரடி அறிவுறுத்தலின் பேரில் இந்த மறுவிசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. மருத்துவ மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் சித்ரா தலைமையிலான உயர் மட்டக் குழுவினர், பாதிக்கப்பட்ட ஏழைகளின் புகார்களின் அடிப்படையில் தங்களது விசாரணையை மீண்டும் தீவிரமாகத் தொடங்கியுள்ளனர். இந்த அதிரடி நடவடிக்கையால், பின்னணியில் இருக்கும் முக்கியப் புள்ளிகள், இடைத்தரகர்கள் மற்றும் பிரபல மருத்துவமனை நிர்வாகத்தினர் பலர் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுவதால், இச்சம்பவம் தமிழக அரசியல் மற்றும் மருத்துவ வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.