ஸ்ரீபெரும்புதூரில் தனியார் நிறுவனம் ஒன்று வேலை பார்த்து வருபவர் சௌந்தர்யா. 23 வயதான இவ்வாறு சொந்த ஊர் நாகப்பட்டினம். இவர் தன்னுடைய தோழிகளோடு அதே பகுதியில் தனியாக அறை எடுத்து தங்கி வந்து வேலைக்கு சென்றுள்ளார். இவருக்கும் அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த தினேஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறி உள்ளது. அதன் பிறகு இருவரும் கடந்த எட்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளார்கள். இவர்களுடைய காதலுக்கு பெற்றோரும் சம்மதித்துள்ளார்கள். கடந்த ஏப்ரல் மாதம் இவர்களுடைய நிச்சயதார்த்தம் நடைபெற்றது. திருமணம் வருகிற செப்டம்பர் மாதம் நடைபெற இருந்த நிலையில் இதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சௌந்தர்யாவிற்கு வேறு ஒரு நண்பரோடு நெருக்கமான பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனை தினேஷ் பலமுறை கண்டித்துள்ளார். இருந்தாலும் சௌந்தர்யா தினேசன் போன் நம்பரை பிளாக் செய்து விட்டு நெருக்கமாக ஆண் நண்பரோடு பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தினேஷ் இன்று அதிகாலை 5 மணியளவில் சௌந்தர்யாவை சந்திப்பதற்காக அறைக்கு வந்துள்ளார். அப்போது சௌந்தர்யா தனியாக இருந்த நிலையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்.
இதனால் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து இறந்துள்ளார் சௌந்தர்யா. பிறகு அங்கிருந்து கணேஷ் தப்பி ஓடிவிட்டார் தினேஷ். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சௌந்தர்யாவை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளார்கள். சௌந்தர்யா கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள கப்தாங்கஞ்ச் பகுதியில் ஒரு துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. கீர்த்தி சிங் என்ற…
பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண், சமீபத்தில் தனது கேப் பயணத்தின் போது ஏற்பட்ட மிகவும் பாதுகாப்பற்ற மற்றும் பயமுறுத்தும் அனுபவத்தை…
இந்தியக் குடும்பங்களில் இன்றும் தொடரும் பழமைவாதத் திருமணச் சிந்தனைகளை ரஷ்மி ராஜ் என்ற இளம் பெண் சமூக வலைதளத்தில் வீடியோவாகப்…
சீனாவில் ஒரு தந்தை தனது மகனுடன் நேரத்தைச் செலவிட்டு, அவர்களுக்கிடையேயான பாசப் பிணைப்பை வலுப்படுத்துவதற்காக தனது 12 வயது மகனை…
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர், தனது வீட்டில் ஏற்பட்ட ஒரு சிறிய குழாய் கசிவை (Pipe leak) சரிசெய்ய…
தமிழகத்தில் தவெக அரசு 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' மூலம் மகளிருக்கான மாதாந்திர உரிமைத்தொகையை ₹2,500 ஆக உயர்த்தி, அடுத்த 6…