“பாவம் அந்த பிஞ்சு குழந்தை…” ஸ்கூலில் நண்பர்களுடன் விளையாடிய கடைசி நொடி… விஷப்பாம்பு கடித்து பலியான சோகம்…. கதறும் குடும்பத்தினர்…!!

By Devi Ramu on ஆவணி 7, 2026

Spread the love

தெலுங்கானா மாநிலம் நாராயணபேட்டை மாவட்டத்தில் உள்ள எக்னாஸ்பூர் அரசுப் பள்ளியில் பெரும் சோகச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அங்குள்ள வகுப்பறை ஒன்றில் அமர்ந்து 3-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த ரஞ்சித் (8) என்ற சிறுவனை, எதிர்பாராதவிதமாக உள்ளே புகுந்த விஷப்பாம்பு ஒன்று கடித்துள்ளது. உடனடியாக மீட்கப்பட்ட அந்த மாணவன் சிகிச்சைக்காக மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.

மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தபோதிலும், விஷம் முறிந்த நிலையை அடைய முடியாமல் சிறுவன் ரஞ்சித் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். அரசுப் பள்ளியின் பராமரிப்பின்மை மற்றும் அலட்சியமே இந்த விபத்திற்குக் காரணம் எனக் கூறி, ஆத்திரமடைந்த மாணவனின் பெற்றோரும் உறவினர்களும் பள்ளி நுழைவாயில் முன்பாகத் திரண்டு தீவிர போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.