CINEMA
“இருந்த காசு எல்லாம் ஹாஸ்பிடல் செலவுக்கே போயிடுச்சி.. அடுத்த மாசம் வாடகை குடுக்க கூட”.. உடைந்துபோன போண்டாமணியின் மகன்..
நடிகர் போண்டா மணி, இலங்கையில் செப்டம்பர் மாதம் 1963 -ஆம் ஆண்டு பிறந்தார். அங்கிருந்து தமிழகத்திற்கு வந்தார். தமிழ் சினிமாவில் தான் முதன் முதலில் அறிமுகம் ஆனார் போண்டா மணி அவர்கள். நடிகர் மற்றும் இயக்குனர் பாக்யராஜ் நடிப்பில் வெளியான “பவுனு பவுனுதான்” படத்தில் அறிமுகமானவர் நடிகர் போண்டா மணி. இந்த படத்திற்கு பிறகு சுமார் 270 படங்களில் துணை காமெடி நடிகராக நடித்துள்ளார் இவர். பல முன்னணி நடிகர்கள் மற்றும் காமெடி நடிகர்களுடன் இனைந்து நடித்த பெருமை கொண்டவர் போண்டாமணி அவர்கள். அரசியலிலும் ஈடுபட்டு வைத்தார் நடிகர் போண்டாமணி.
மேலும், கடந்த வருடம் கிட்னி செயலிழந்த நிலையில் சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் நடிகர் போண்டா மணி அவர்கள். அங்கு மருத்துவ செலவுக்கு உதவி வேண்டும் என்று நடிகர் போண்டா மணி கேட்டுக்கொண்டதை நாம் அறிவோம். மேலும், இவரின் மருத்துவ செலவுக்கு பிரபலங்கள் ரஜினிகாந்த், தனுஷ், விஜய் சேதுபதி, மயில்சாமி உள்ளிட்ட பலர் உதவி செய்தனர்.
இந்த நிலையில் நேற்று வீட்டில் திடீரென மயங்கி விழுந்த போண்டா மணி குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அங்கு போண்டா மணியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். நடிகர் போண்டா மணியின் மரணம் தமிழ் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
இறந்த நடிகர் போண்டாமணிக்கு மகன் மற்றும் மகள் உள்ளார்கள். போண்டாமணியின் மகன் தனது அப்பாவின் மரணம் குறித்து செய்தியாளர்களுக்கு பதில் அளித்துள்ளார். அதில், அப்பா தான் எல்லாத்தையும் பார்த்துக்கொண்டார், இதன் பிறகு என்ன செய்வது என்றே தெரியவில்லை என்று கலங்கி நிலையில் பேசியுள்ளார் நடிகர் போண்டாமணியின் மகன்.