கோவை மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் ஈமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதில், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குண்டு வெடிக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள், போலீஸ் மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டு எதுவும் அங்கிருந்து சிக்கவில்லை. அதன்பிறகு இது வெறும் புரளி என தெரிய வந்தது.
கடந்த ஐந்து மாதங்களில் பதினாறாவது முறையாக இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து புகார் அளிக்கப்படும் மிரட்டல் விடுப்பவர்களை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள். என்ன காரணத்திற்காக இது போன்ற மிரட்டல் எடுக்கப்படுகின்றது என்பதை கண்டறிய முடியவில்லை. டார்க் நெட் மூலமாக மிரட்டல் விடுப்பதால் ஐடியை கண்டுபிடிப்பதில் சிக்கல் உள்ளதாகவும் மர்ம நபர்களைப் பிடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…