டெல்லியில் பரபரப்பு… மேயர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்..? போலீசார் தீவிர விசாரணை..!

By Swetha on ஆனி 5, 2026

Spread the love

டெல்லி மாநகராட்சி மேயர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்தத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து, மாநகராட்சி அலுவலக வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு அகற்றும் பிரிவினர் அடங்கிய பாதுகாப்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன. அசம்பாவிதங்கள் ஏதேனும் ஏற்படுவதைத் தடுப்பதற்காக, முன்னெச்சரிக்கை சோதனைகள் உடனடியாகத் தொடங்கப்பட்டன.

   

பாதுகாப்புப் படையினரின் தீவிரச் சோதனையை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அலுவலக வளாகம் முழுவதும் முழுமையாகக் காலி செய்யப்பட்டது. பின்னர், அப்பகுதி முழுவதும் பாதுகாப்புக் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு, தீவிரப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.