“வீட்ல தனியா இருக்கீங்களா”… அத்துமீறிய டெலிவரி பாய்… ஓங்கி அறைந்து வேலையை பறித்த பெண்ணின் வைரல் வீடியோ…!

By SATHISH R on ஆடி 3, 2026

Spread the love

மனிதநேயத்திற்கு நேர்ந்த அவமானம்: தாகத்திற்குத் தண்ணீர் கொடுத்த பெண்ணிடம் அத்துமீறிய பிளிங்கிட் டெலிவரி பாய்!

ஆன்லைன் மளிகைப் பொருள் விநியோக நிறுவனமான ‘பிளிங்கிட்’ ஊழியர் ஒருவர், வாடிக்கையாளரான இளம் பெண்ணிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட சம்பவம் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராமில் ‘சியாஸ்பீக்ஸ்’ என்ற கணக்கைக் கொண்ட அந்தப் பெண், தனக்கு நேர்ந்த இந்த அதிர்ச்சி அனுபவத்தை வீடியோவாகப் பகிர்ந்துள்ளார். “இன்று என்னால் ஒருவனுடைய வேலை பறிபோனது, அவன் அதற்கு முற்றிலும் தகுதியானவன் தான்” என்ற வாசகத்துடன் அவர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

   

அந்தப் பெண்ணின் விவரிப்பின்படி, யாரோ ஒருவர் அவருக்கு அனுப்பிய பிளிங்கிட் ஆர்டரை டெலிவரி செய்வதற்காக அந்த இளைஞர் அவரது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது கோடை வெயிலைக் கருத்தில் கொண்டு, மனிதாபிமான அடிப்படையில் அந்தப் பெண் அந்த டெலிவரி பாய்க்குப் குடிக்கத் தண்ணீர் கொடுத்துள்ளார். ஆனால், தண்ணீரைக் குடித்த அந்த இளைஞரின் புத்தி மாறியுள்ளது. வீட்டின் உள்ளே விநோதமாக நோட்டமிட்ட அவன், “வீட்டில் நீங்கள் தனியாகத்தான் இருக்கிறீர்களா?” என்று கேட்டு அதிர்ச்சியூட்டியுள்ளான்.

   

https://www.instagram.com/reel/DaNSS51oZsy/?utm_source=ig_web_button_share_sheet

 

அதோடு நிறுத்தாமல், அந்தப் பெண்ணின் இன்ஸ்டாகிராம் ஐடியைக் கேட்டு, அவரது அனுமதியின்றி மிக நெருக்கமாக வந்து அத்துமீற முயன்றுள்ளான். இதனால் தனக்கு ஆபத்து என்பதை உணர்ந்த அந்தப் பெண், சற்றும் பதற்றமடையாமல் சுதாரித்துக் கொண்டு அவனது கன்னத்தில் பளாரென ஒரு அறை விட்டுள்ளார். பெண்ணின் இந்த அதிரடித் தாக்குதலால் பயந்துபோன அந்த இளைஞர், உடனடியாக அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

இந்தக் கொடூரமான அத்துமீறல் குறித்து அந்தப் பெண் உடனடியாக பிளிங்கிட் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்ட பிளிங்கிட் நிறுவனம், உடனடியாக அந்த டெலிவரி பாயை பிளாக் செய்ததோடு, அவன் இனி தங்கள் நிறுவனத்தில் பணியாற்ற முடியாது என்று கூறி வேலையை விட்டு அதிரடியாக நீக்கியுள்ளது. ஆபத்தான சூழலில் பெண்கள் பயந்து நடுங்காமல், எப்படித் தைரியமாகத் தற்காப்பு நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு முன்னுதாரணமாக அமைந்துள்ளதாக நெட்டிசன்கள் பலரும் அந்தப் பெண்ணின் துணிச்சலைப் பாராட்டி வருகின்றனர்.