ட்விஸ்ட்டுக்கு மேல் ட்விஸ்ட்.. நயினாருக்கு அமைச்சர் பதவி?.. புதிய தலைவர் ரேஸில் இருக்கும் ‘அந்த’ நபர்.. பாஜக போட்ட அதிரடி கணக்கு.. ஆடிப்போன எதிர்கட்சிகள்..

By Muthu Mani on ஆனி 4, 2026

Spread the love

பா.ஜ.க தேசியத் தலைவர் நிதின் நபினைச் சந்தித்த முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, தனது ஐந்து பக்க ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார். தமிழக பா.ஜ.க-வில் தான் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டதாகவும், அ.தி.மு.க-வுடன் கூட்டணி தொடர்ந்த தவறான அரசியல் முடிவுகளால் கட்சியின் வாக்கு சதவீதம் சரிந்துவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், பா.ஜ.க-விலிருந்து விலகி ‘தமிழ்நாடு-முதலில்’ (Tamil-first) என்ற கொள்கையுடைய புதிய மாநிலக் கட்சியைத் தொடங்க அவர் திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்ணாமலை முன்வைத்த உட்கட்சி மோதல்கள் மற்றும் நிர்வாகக் குறைபாடுகள் குறித்த புகார்களுக்கு விளக்கம் பெற, தற்போதைய மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லிக்கு அவசரமாக அழைக்கப்பட்டுள்ளார். கட்சியின் தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல். சந்தோஷ் முன்னிலையில் இதுகுறித்த ஆலோசனைகள் நடைபெற்று வரும் நிலையில், நயினார் நாகேந்திரனுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் வழங்குவது குறித்தும் பா.ஜ.க மேலிடம் பரிசீலித்து வருகிறது.

   

தமிழக பா.ஜ.க-வை வலுப்படுத்தவும், அண்ணாமலையின் ஆக்ரோஷ அரசியலுக்கு மாற்றாகவும் ஒரு நிதானமான தலைமையை மேலிடம் விரும்புகிறது. ஆர்.எஸ்.எஸ் பின்னணியும், ஆழமான கொள்கை பிடிப்பும் கொண்ட தற்போதைய மாநிலப் பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம.சீனிவாசன் புதிய தலைவராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. அறிவுசார் தளத்தில் இயங்கும் இவரின் நியமனம், தென் தமிழகத்தில் கட்சியின் செல்வாக்கை உயர்த்த உதவும் என பா.ஜ.க கணக்கு போடுகிறது.

   

தமிழக பா.ஜ.க அமைப்பை முழுமையாக மறுசீரமைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, கட்சியின் முக்கியப் பொறுப்பான மாநில அமைப்புச் செயலாளர் பதவிக்கு கே.டி. ராகவன் நியமிக்கப்படலாம் என்ற தகவலும் பரவி வருகிறது. தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த அதிரடி மாற்றங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் கமலாலய வட்டாரங்களில் இருந்து விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.