அதிமுக பொதுக்குழு சிறப்பாக நடைபெற்றதற்கு எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்ததோடு தொகுதி பங்கீடு தொடர்பாக பேசியதாகவும் பேட்டியளித்துள்ளார். சென்னையில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இந்த சந்திப்பு நடைபெற்றது. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய நயினார் நாகேந்திரன், அதிமுக பொதுக்குழு சிறப்பாக நடைபெற்றது.
அதற்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் கூட்டணி தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக எதுவும் பேசவில்லை. மரியாதை நிமித்தமாக மட்டுமே சந்தித்தேன் என்று கூறினார். நாளை மறுநாள் டெல்லி செல்ல உள்ளதாகவும் தெரிவித்தார். இபிஎஸ் உடன் சந்திப்பு மற்றும் டெல்லி பயணம் என அனைத்தையும் வைத்து பார்க்கும் போது மீண்டும் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் NDA கூட்டணியில் இணைவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடப்பதாகவே தகவல் வெளியாகி உள்ளது.
சோதனைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், காலை 7 மணிக்குத் தொடங்கிய சோதனை முடியும் வரை…
தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஏழு சட்டமன்றத் தொகுதிகளில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6-ஆம்…
தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளுக்கு அரசின் அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரில்,…
ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்காதவர்களுடன் எதற்கு கூட்டணி என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி…
முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் சென்னை மற்றும் திருச்சி உள்ளிட்ட 6 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார்…
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் நடைபெற்று வரும் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரின் சோதனை நடவடிக்கை தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றப்…