கர்வால் பாஜக எம்.பி. அனில் பலுனி, தேவ்பிரயாக் அருகே பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் இருந்து மயிரிழையில் தப்பியா வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேரிடர் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய அவர் சென்றிருந்தபோது, அவரது வாகனத் தொடரணியின் முன் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவைக் கவனித்து அவர் வாகனத்தை நிறுத்தினார். அவர் தனது வாகனத்திலிருந்து இறங்கி மற்றவர்களை தன்னைப் பின்தொடருமாறு வற்புறுத்தினார்.
उत्तराखंड में इस वर्ष आई भीषण अतिवृष्टि और भूस्खलन ने इतने गहरे घाव दिए हैं, जिन्हें भरने में बहुत समय लगेगा।
कल शाम आपदा प्रभावित क्षेत्र में भूस्खलन का एक भयावह दृश्य आप सभी के साथ साझा कर रहा हूं। यह दृश्य स्वयं बता रहा है कि हमारा उत्तराखंड इस समय कितनी भीषण प्राकृतिक आपदा… pic.twitter.com/fdTsXpPsm2
— Anil Baluni (@anil_baluni) September 18, 2025
சில நிமிடங்களில், மலையின் ஒரு பெரிய பகுதி கீழே விழுந்ததால் எம்.பி. பீதியடைந்து பாதுகாப்புக்காக திரும்பி ஓடியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்த பருவமழைக் காலத்தில் உத்தரகண்ட் மாநிலம் தொடர்ச்சியான இயற்கை பேரழிவுகளைச் சந்தித்து வருகிறது, பல மாவட்டங்களில் பெய்து வரும் மழை மற்றும் தொடர்ச்சியான மேக வெடிப்புகள் பரவலான சேதம், நிலச்சரிவுகள் மற்றும் உயிர் இழப்புகளை ஏற்படுத்தியுள்ளன.
