கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பாஜக நிர்வாகி விஜி கௌடா பட்டில் பாபாலீஸ்வரர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு உள்ளார். இவரின் மகன் சமர்த் கவுடா பட்டில் என்பவரும் பாஜக கட்சியில் உள்ளார். இந்நிலையில் சமர்த், நேற்று கனோலி சுங்கச்சாவடி வழியாக ஆதரவாளர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தபோது சுங்கச்சாவடி கட்டணம் செலுத்துமாறு ஊழியர் கேட்டுள்ளார். அப்போது தான் பாஜக நிர்வாகியின் மகன் என்றும் தனது காருக்கு சுங்க கட்டணம் வசூலிக்கக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.
பிறகு காரில் இருந்து இறங்கிய அவர் சுங்கச்சாவடிக்குள் சென்று அங்கு பணியில் இருந்த ஊழியரை சரமாரியாக தாக்கினார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த தாக்குதலை தொடர்ந்து பாதிக்கப்பட்ட ஊழியர் புகார் அளிக்காததால் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்ய முடியாது என போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போது இந்த வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.
இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியின் போது, தேசிய கீதம் இசைக்கப்பட்ட சமயம் வைபவ் சூர்யவன்ஷிக்கு…
மகாராஷ்டிராவின் புனே அருகே உள்ள லோகாட் கோட்டை பகுதியில், இளம் தொழிலதிபர் கேதன் அகர்வால் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியை வீழ்த்த ஆளுங்கட்சியான திமுக தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நிலத் தகராறு காரணமாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தனது வயதான தந்தையை…
இந்தூர் மாவட்டம் கம்பேல் பகுதியில் உள்ள ஒரு திருமண ஊர்வலத்தின் போது, குதிரை ஒன்று நடனமாட மறுத்ததால் அதன் உரிமையாளர்…
திரையுலகில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில்…