நாடே உற்றுநோக்கும் பீஹார் தேர்தல்: அடுத்து ஆட்சியை பிடிக்கப்போவது யார்..? வெளியான பரபரப்பு கருத்துக் கணிப்பு…!!

By Soundarya on ஐப்பசி 11, 2025

Spread the love

பீகார் அரசியல் களம் நாள்தோறும் அதிரடி மாற்றங்களை சந்தித்து வருகிறது. எதிரணியில் உள்ளவர்களை ஆளும் பாஜக தங்கள் வசம் இழுத்து வருகிறது. எதிர் கட்சியினர் இம்முறை எப்படியாவது ஆட்சியை பிடித்தே தீர வேண்டும் என்று போராடி வருகிறது.  இப்படி அடுத்து என்ன நடக்கும் நாடே உற்றுநோக்கும் பிஹாரின் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை C-Voters வெளியிட்டுள்ளது.

அதன்படி, NDA கூட்டணி 40% வாக்குகளை பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. INDIA கூட்டணி 38.3% வாக்குகளையும், ஜன் சுராஜ் 13.3% வாக்குகளையும் பெற வாய்ப்புள்ளதாம். அதேநேரம், மக்களின் விருப்பமான முதலமைச்சர் பட்டியலில் 36.20% பெற்று தேஜஸ்வி முதலிடத்தில் உள்ளார். 23.2% பெற்று PK  இரண்டாவது இடத்திலும், 15.9% பெற்று நிதிஷ் 3-வது இடத்திலும் உள்ளனர்.