விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆனது பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியானது, இன்றுடன் 47 நாட்களை நிறைவு செய்துள்ளது. இதில் தொடக்கத்தில் 18 போட்டியாளர்களும், இடையில் வைல்ட் கார்ட் போட்டியாளர்களும் என மொத்தம் 23 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர். இவர்களில் தற்பொழுது வரை 8 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.
பிக் பாஸ் வீட்டில் சண்டைக்கும் சச்சரவுக்கும் பஞ்சமே இருக்காது நம் அனைவருக்கும் தெரியும். அதேபோல காதல் கிசுகிசுவிற்கும் பஞ்சமில்லை. ஆரம்பத்தில் மணி-ரவீனா இருவருக்கும் இடையில் காதல் கதை ஓடிக்கொண்டிருந்தது. இதை தொடர்ந்து நிக்சன் ஐஷு காதலிப்பதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் பூர்ணிமா தற்பொழுது விஷ்ணுவிடம் தனது காதல் வலையை வீசியுள்ளார்.
தற்பொழுது இன்றைய நாளின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான மூன்றாவது பிரமோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த ப்ரோமோவில் விஷ்ணு பூர்ணிமா இருவரும் அமர்ந்து பேசிக் கொண்டுள்ளனர். அப்பொழுது ‘விஷ்ணு என் வீட்டில் எந்த பொண்ண கையை காட்டினாலும் கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்லுவாங்க. அவர் சொன்னாருல்ல பொறுக்கின்னு பொறுக்கி தனமா நான் சுத்திட்டு இருக்க மாட்டேன். நான் இப்ப வரைக்கும் சிங்கிளா தான் இருக்கேன். இதைக்கேட்ட பூர்ணிமா ‘யார் தாங்க நீங்க?’ என கேட்க, அதற்கு அவர் ‘விஷ்ணு விஜய்’ என்று தனது பெயரை கூறுகிறார்.
‘இப்போ ஒரு விஷ்ணுவா இருக்கீங்கல்ல இந்த மாதிரி இருந்தா எனக்கு புடிச்சிருக்கு’ என்று பூர்ணிமா தனது காதல் வலையை வீசுகிறார். நான் ஓப்பனா சொல்லிடட்டா. எனக்கு உங்க மேல பீலிங் இருக்கு. எனக்கு என்ன தோணுதோ சொல்றேன். உங்களுக்கு புடிச்சாலும் புடிக்கலைன்னாலும் நீங்க சொல்லிடலாம். அதற்கு விஷ்ணு ‘நான் எதுவுமே சொல்லலையே’ என கூறுகிறார். உடனே பூர்ணிமா ‘எனக்கு ஃபீலிங் இருக்கு நீங்க அப்படி பண்றீங்களான்னு கேட்கிறேன்’ என்று கூறுகிறார். இதைபார்க்கும் பொழுது அடுத்த காதல் ஜோடி ரெடியாகி விட்டார்கள் போல நமக்கு தெரிகிறது. இது நிஜமா? இல்ல கண்டென்டா? பூர்ணிமா… இத பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கனு கமெண்ட்ல சொல்லுங்க… இதோ அந்த ப்ரோமோ வீடியோ…