விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். ஆரம்பத்தில் அவர் எப்படி தொகுத்து வழங்குவார் என்ற கவலை பிக் பாஸ் ரசிகர்களுக்கு இருந்த நிலையில் அட்டகாசமாக தொகுத்து வழங்கி வருகின்றார். போட்டியாளர்கள் யார் என்ன செய்தாலும் சுற்றி வளைத்து பேசுவது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த இருப்பதால் ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர். பிக் பாஸ் வீட்டிற்கு கடந்த வாரம் வைல்டு கார்டு என்ட்ரி ஆக சிவக்குமார், மஞ்சரி, ரானவ், பிரியா மற்றும் வர்ஷினி வெங்கட், ரயான் ஆகிய ஆறு போட்டியாளர்கள் வந்த நிலையில் கடந்த வாரம் மக்கள் மத்தியில் குறைந்த வாக்குகளை பெற்ற சுனிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. பெண்கள் அணி ஒருபுறமும் ஆண்கள் அணி ஒருபுறமும் பிரிக்கப்பட்டு தனித்தனியே தக்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த வாரம் போட்டியாளர்களுக்கு பள்ளிக்கூடம் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் நிகழ்ச்சியை விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இப்படியான நிலையில் பிக் பாஸ் வீட்டுக்குள் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே வந்துள்ள ஆறு போட்டியாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.
அதன்படி வைல்டு கார்டு போட்டியாளர்களிலேயே அதிக சம்பளம் வாங்குவது ரயான் தான். இவருக்கு ஒரு நாளைக்கு ரூ.15 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படுகிறது. அடுத்தபடியாக ஷிவக்குமார், ராணவ் மற்றும் வர்ஷினி வெங்கட் ஆகியோருக்கு தலா ரூ.12 ஆயிரம் சம்பளம் ஒரு நாளைக்கு வழங்கப்படுகிறது. அடுத்து ரியா மற்றும் மஞ்சரி ஆகியோர் ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது
கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செங்கோட்டையன், அளுக்குளி எம்.ஜி.ஆர். நகரில்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தில், அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது…
சென்னையில் தேர்தல் பரப்புரையின் போது விதிகளை மீறியதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்குப் பதிவு…
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பிற்பகல் 3 மணிக்கு தனது…
கடலூர் மாவட்டத்தின் ஸ்ரீமுஷ்ணம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன், திமுக ஆட்சியைத் தொடர…