நானே கதவை திறந்து விடுறேன் வெளிய வந்துருங்க.. பிக்பாஸ் போட்டியாளர்களை வெளுத்து வாங்கிய விஜய் சேதுபதி..!

Spread the love

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். கமல்ஹாசன் அளவுக்கு விமர்சனங்களுக்கு பஞ்சம் இல்லாத விதத்தில் நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கி வருகின்றார். இதுவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து ரவீந்தர், தர்ஷா குப்தா, சுனிதா, அர்னவ், ரியா தியாகராஜன், வர்ஷினி வெங்கட் மற்றும் சிவகுமார் ஆகியோர் வெளியேறியுள்ளனர். இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்களுக்கு பஞ்சம் இல்லாமல் சுமார் 17 போட்டியாளர்கள் விளையாடி வருகிறார்கள்.

நாட்கள் குறைவாகவும் போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் இருப்பதால் இரண்டு போட்டியாளர்களை வெளியேற்றும் சூழலில் பிக் பாஸ் உள்ளது.  கடந்த வாரமே டபுள் எவிக்ஷன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் சாச்சனா தப்பினார். ஆனால் இந்த முறை பிக் பாஸ் ஓட்டிங்கில் கடைசி இடத்தில் இருக்கும் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி இந்த வாரம் தர்ஷிகா மற்றும் ஆனந்தி ஆகியோர் வெளியேற அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி க்கான  இன்றைய ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், ரேயான் gang மட்டும் தனியா உட்காருங்க என்று விஜய் சேதுபதி கூறிவிட்டு இந்த டீம் ஆட்டத்தை எவ்வளவு பாதிக்குது என்று மற்ற போட்டியாளர்களை நோக்கி கேள்வி எழுப்புகிறார். அப்போது அனைவரும் எழுந்து நின்று தங்களுடைய கருத்துக்களை கூற விஜய் சேதுபதி தயவு செஞ்சு நானே கதவை திறந்து விடுறேன் நீங்களே வெளிய வந்துருங்க, அங்க இருந்து ஆட்டத்தை கெடுத்துகிட்டு இருக்காதீங்க வெளிய வந்து முடிஞ்ச அளவுக்கு சப்போர்ட் பண்ணுங்க என்று கோபத்தோடு பேசுகிறார். அது தொடர்பான ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது.

 

Nanthini

Recent Posts

“உங்க அப்பா அங்கேயே சுத்திட்டு இருக்காரு!”… இறந்த தந்தையின் ஆவியை ‘பார்சல்’ செய்ய வந்த குடும்பம்…கோட்டா மருத்துவமனையில் நடந்த அதிர வைக்கும் தாந்திரீக சடங்கு…!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…

10 மணத்தியாலங்கள் ago

“மனுஷன் பேசுறது நாய்க்கே புரியுதா?”… நாயுடன் அமர்ந்து ராஜு குமார் செய்த அலப்பறை… வயிறு குலுங்கச் சிரிக்கும் நெட்டிசன்கள்… வைரல் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…

10 மணத்தியாலங்கள் ago

“ஒரே ஒரு சின்ன தவறு.. அழகான புன்னகைக்கு ஆசைப்பட்டுமொத்த பற்களும் அவுட்!… துருக்கி பல் மருத்துவர் செய்த விபரீத… ஜாக்கியின் கண்ணீர் கதை”…!!!

அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…

10 மணத்தியாலங்கள் ago

“அந்த 500 ரூபாய்க்கு பதில் லட்சங்களில் உதவி!”… அழுதுகொண்டிருந்த மூதாட்டியின் கண்ணீரை துடைத்த சமூக வலைத்தளம்… நெஞ்சை நனைக்கும் வைரல் சம்பவம்…!!!

சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…

11 மணத்தியாலங்கள் ago

“காசு கொடுத்தாத்தான் 4 பேர் வரணும்!”… ராபிடோ ஓட்டுநரின் அடாவடி செயலால் நடுத்தெருவில் நின்ற குடும்பம்… மும்பையில் நடந்த பகீர் சம்பவம்… வைரல் வீடியோ…!!!

மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…

11 மணத்தியாலங்கள் ago

“எங்களுக்கும் இப்படி ஒரு சார் கிடைச்சிருக்கலாம்!”… மாணவர்களுடன் சேர்ந்து பாடி அசத்திய கிதார் ஆசிரியர்… நெட்டிசன்களின் மனதை நெகிழ வைத்த ஆசிரியர்…. இணையத்தை நனைக்கும் வைரல் வீடியோ…!!!

இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…

11 மணத்தியாலங்கள் ago