பிக்பாஸ் வீட்டில் அடிதடி.. சந்திரமுகியாக மாறிய சௌந்தர்யா.. வெளியான பரபரப்பு ப்ரோமோ..!

By Nanthini on மார்கழி 12, 2024

Spread the love

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். கமல்ஹாசன் அளவுக்கு எந்த ஒரு விமர்சனங்களும் வராத அளவிற்கு விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார். தவறு செய்யும் போட்டியாளர்களையும் வெளுத்து வாங்கி விடுகிறார். மற்ற சீசன்களைப் போல் இல்லாமல் இந்த சீசனில் ஆண் மற்றும் பெண் போட்டியாளர்கள் என பிரிக்கப்பட்டு நிகழ்ச்சியில் நடந்து கொண்டிருக்கிறது.

Mid Week Eviction in Bigg Boss Tamil Season 8 : பிக் பாஸ் தமிழ் மிட் வீக்  எவிக்‌ஷன்! வெளியேறப்போவது தர்ஷிகா-வா? சத்யாவா?

   

பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது பத்தாவது வாரத்தில் அடி எடுத்து வைத்துள்ளது. மொத்தம் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6 வைல்டு கார்டு போட்டியாளர்கள் மற்றும் வாரம் தோறும் எலிமினேஷனை தொடர்ந்து தற்போது 15 போட்டியாளர்கள் உள்ளே உள்ளனர். இந்த சீசன் முடிவடைவதற்கு இன்னும் 35 முதல் 45 நாட்களே உள்ள நிலையில் ஒவ்வொரு வாரமும் இரண்டு போட்டியாளர்கள் கூட வெளியேற வாய்ப்புள்ளது. கடந்த வாரம் எலிமினேஷனில் முதலில் ஆர் ஜே ஆனந்தியும் அதன் பிறகு சச்சனாவும் தொடர்ந்து வெளியேற்றப்பட்டனர்.

   

பிக் பாஸில் வித்தியாசமான முறையில் வெளியேறிய 2 போட்டியாளர்கள்! கதறி அழுத  முத்து - மனிதன்

 

இந்த வாரம் நாமினேஷனில் ஒன்பது போட்டியாளர்கள் உள்ளனர். தற்போது நிகழ்ச்சி மேலும் சூடு பிடிக்க தொடங்கியுள்ள நிலையில் இன்றைய ப்ரோமோ வெளியாகி உள்ளது. அந்த ப்ரோமோவில் போட்டியாளர்களுக்கு இடையே அடிதடி ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் சௌந்தர்யா சத்தம் போட்டு கத்துகிறார். போட்டியாளர்களுக்கு இடையே கலவரம் ஏற்பட்ட நிலையில் அது தொடர்பான பரபரப்பு ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது.

 

 

Instagram இல் இந்தப் பதிவைக் காண்க

 

Vijay Television பதிவைப் பகிர்ந்துள்ளார் (@vijaytelevision)