விஜய் டிவியின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் கடந்த அக்டோபர் 6ம் தேதி பிரமாண்டமாக தொடங்கியது. இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகிய நிலையில் தற்போது கமல்ஹாசனுக்கு பதில் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி 18 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஒன்பது ஆண்கள் மற்றும் ஒன்பது பெண்கள் என மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் 24 மணி நேரத்தில் போட்டியாளர் சாச்சனா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் பிறகு மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து முதல் வார எலிமினேஷனில் போட்டியாளர் ரவீந்தர் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து கடந்த வார இறுதியில் போட்டியாளர் அரணவ் எலிமினேட் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து தற்போது எஞ்சியுள்ள 16 போட்டியாளர்கள் இடையே கடும் போட்டியை நடைபெற்று வருகிறது. இதில் இந்த வார நாமினேஷனில் முத்துக்குமரன், சௌந்தர்யா, அருண் பிரசாத், சத்யா, ஜாக்குலின், அன்ஷிதா, தர்ஷா குப்தா மற்றும் பவித்ரா ஆகியோர் இடம் பெற்றுள்ள நிலையில் இவர்களில் முத்துக்குமரன் மற்றும் சௌந்தர்யா ஆகியோர்தான் அதிக ஓட்டுகளை வாங்கி முன்னிலையில் இருப்பதால் இவர்களைத் தொடர்ந்து தர்ஷா குப்தா, பவித்ரா மற்றும் அன்ஷிதா ஆகிய மூன்று பேரும் டேஞ்சர் ஜோனில் இருப்பதால் இவர்கள் மூவரில் ஒருவர்தான் இந்த வாரம் எளிமையாக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், இதில் தர்ஷா குப்தா வெளியேற்றப்பட்டு இருக்கிறார்.
ஆரம்பத்தில் இருந்தே சுவாரசியம் இல்லாமல் விளையாடிய தர்ஷா, சில சமயங்களில் முட்டாள்தனமாகவும், பல நேரங்களில் வம்படியாக கன்டென்ட் கொடுக்க வேண்டும் என்றும் செயல்பட்டார். இதனை சமூக வலைதளவாசிகள் கமெண்ட்களில் வறுத்தெடுத்தனர். அதன் பிரதிபலிப்பே, இன்று அவரை பிக்பாஸ் வெளியேற்றி இருக்கிறார். வெளியேறும் போது தர்ஷா குப்தா கூறியது, 24 மணி நேர நாமினேஷனில் ஒரு போட்டியாளரை வெளியேற்ற டாஸ்க் வைக்கப்பட்ட போது, ஒரு மாதத்திற்கு தேவையான டிரஸ் எல்லாத்தையும் பார்த்து பார்த்து எடுத்து வந்துள்ளேன். எனவே குறைந்த பச்சன் 100 நாட்களாவது பிக்பாஸ் வீட்டில் உள்ளே இருக்க வேண்டும் என ஆசைப்பட்டடேன் என கூறியது இவரின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுப் பெண்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோளை விடுத்துள்ளார்.…
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கை சிக்கல்கள் மற்றும் தேர்தல் நடத்தை…
புதுச்சேரி மற்றும் தமிழக எல்லைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், மனித உறவுகளுக்கு இடையே பணப் பரிமாற்றம்…
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே காந்தி நகரில் வாடகைக்கு தங்கி, ஒரகடம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தேனி மாவட்டத்தைச்…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அக்கட்சியின் கொள்கை முழக்கத்தோடு கூடிய தேர்தல் அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டு அரசியல் களத்தில்…
தமிழக அரசியல் களம் 2026 சட்டசபைத் தேர்தலை எதிர்நோக்கி அனல் பறந்து வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்…