விஜய் டிவியின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் கடந்த அக்டோபர் 6ம் தேதி பிரமாண்டமாக தொடங்கியது. இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகிய நிலையில் தற்போது கமல்ஹாசனுக்கு பதில் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி 18 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஒன்பது ஆண்கள் மற்றும் ஒன்பது பெண்கள் என மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் 24 மணி நேரத்தில் போட்டியாளர் சாச்சனா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் பிறகு மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து முதல் வார எலிமினேஷனில் போட்டியாளர் ரவீந்தர் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து கடந்த வார இறுதியில் போட்டியாளர் அரணவ் எலிமினேட் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து தற்போது எஞ்சியுள்ள 16 போட்டியாளர்கள் இடையே கடும் போட்டியை நடைபெற்று வருகிறது. இதில் இந்த வார நாமினேஷனில் முத்துக்குமரன், சௌந்தர்யா, அருண் பிரசாத், சத்யா, ஜாக்குலின், அன்ஷிதா, தர்ஷா குப்தா மற்றும் பவித்ரா ஆகியோர் இடம் பெற்றுள்ள நிலையில் இவர்களில் முத்துக்குமரன் மற்றும் சௌந்தர்யா ஆகியோர்தான் அதிக ஓட்டுகளை வாங்கி முன்னிலையில் இருப்பதால் இவர்களைத் தொடர்ந்து தர்ஷா குப்தா, பவித்ரா மற்றும் அன்ஷிதா ஆகிய மூன்று பேரும் டேஞ்சர் ஜோனில் இருப்பதால் இவர்கள் மூவரில் ஒருவர்தான் இந்த வாரம் எளிமையாக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், இதில் தர்ஷா குப்தா வெளியேற்றப்பட்டு இருக்கிறார்.
ஆரம்பத்தில் இருந்தே சுவாரசியம் இல்லாமல் விளையாடிய தர்ஷா, சில சமயங்களில் முட்டாள்தனமாகவும், பல நேரங்களில் வம்படியாக கன்டென்ட் கொடுக்க வேண்டும் என்றும் செயல்பட்டார். இதனை சமூக வலைதளவாசிகள் கமெண்ட்களில் வறுத்தெடுத்தனர். அதன் பிரதிபலிப்பே, இன்று அவரை பிக்பாஸ் வெளியேற்றி இருக்கிறார். வெளியேறும் போது தர்ஷா குப்தா கூறியது, 24 மணி நேர நாமினேஷனில் ஒரு போட்டியாளரை வெளியேற்ற டாஸ்க் வைக்கப்பட்ட போது, ஒரு மாதத்திற்கு தேவையான டிரஸ் எல்லாத்தையும் பார்த்து பார்த்து எடுத்து வந்துள்ளேன். எனவே குறைந்த பச்சன் 100 நாட்களாவது பிக்பாஸ் வீட்டில் உள்ளே இருக்க வேண்டும் என ஆசைப்பட்டடேன் என கூறியது இவரின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…
பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…
போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…
முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…
திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…