விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். ஆரம்பத்தில் அவர் எப்படி தொகுத்து வழங்குவார் என்ற கவலை பிக் பாஸ் ரசிகர்களுக்கு இருந்த நிலையில் அட்டகாசமாக தொகுத்து வழங்கி வருகின்றார். போட்டியாளர்கள் யார் என்ன செய்தாலும் சுற்றி வளைத்து பேசுவது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த இருப்பதால் ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

பிக் பாஸ் வீட்டிற்கு கடந்த வாரம் வைல்டு கார்டு என்ட்ரி ஆக சிவக்குமார், மஞ்சரி, ரானவ், பிரியா மற்றும் வர்ஷினி வெங்கட், ரயான் ஆகிய ஆறு போட்டியாளர்கள் வந்தனர்.

#image_title
நிலையில் கடந்த வாரம் மக்கள் மத்தியில் குறைந்த வாக்குகளை பெற்ற சுனிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் சௌந்தர்யா போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.பிக் பாஸ் முதல் நாளில் சௌந்தர்யா விஜய் சேதுபதியிடம் நான் மாடலாக இருக்கிறேன்.\

எனது குரலுக்காக நான் பல இடங்களில் அவமானம் பட்டிருக்கிறேன்.அதற்காகவே மிமிக்ரி செய்வது போன்று பேச வேண்டிய நிலைமை என வேதனையோடு கூறினார். உடனே விஜய் சேதுபதி உங்களுடைய நிஜ குரலை அருமையாக இருக்கிறது என அவரை பாராட்டினார்.

#image_title
சமீபத்தில் சௌந்தர்யா தனது காதலால் பட்ட வேதனை குறித்து மற்ற போட்டியாளர்களுடன் கலந்துரையாடினார். இந்த நிலையில் சௌந்தர்யா சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
