Connect with us

உங்கள பார்த்ததும் இல்ல, சந்திச்சதும் இல்ல.. உங்க அன்புக்காக ஏங்கினேன்.. ஷெரின் வீட்டில் ஏற்பட்ட மரணம்.. சோகத்தில் குடும்பம்..!

CINEMA

உங்கள பார்த்ததும் இல்ல, சந்திச்சதும் இல்ல.. உங்க அன்புக்காக ஏங்கினேன்.. ஷெரின் வீட்டில் ஏற்பட்ட மரணம்.. சோகத்தில் குடும்பம்..!

பிரபல நடிகையான ஷெரின் தனது தந்தை மறைவு குறித்து உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார் இது இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகின்றது. கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்ட ஷெரின் தமிழ் சினிமாவில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருப்பார். செல்வராகவன் இயக்கிய இப்படத்தில் பள்ளி மாணவியாக நடித்த அசத்தியிருப்பார்.

அந்த திரைப்படம் ஹிட்டானதை தொடர்ந்து ஜேடி ஜெர்சி இயக்கத்தில் விசில் என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் வெளியான அழகிய அசுரா பாடல் மிகவும் பிரபலமானது. அதனை தொடர்ந்து தமிழ் திரைப்படங்கள் ஹிட்டு கொடுக்காத காரணத்தினால் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடிக்க தொடங்கினார். நீண்ட இடைவெளிக்கு பிறகு பீமா படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடியே செரின் பிறகு தமிழ் சினிமா பக்கமே தலை காட்டாமல் இருந்து வந்தார்.

   

 

பல ஆண்டுகள் கழித்து நண்பேண்டா என்ற திரைப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்திருந்தார். அதில் உடல் எடை அதிகரித்து இருந்த அவரை பார்த்து யாருக்கும் பெரிதாக அடையாளம் தெரியவில்லை. இதையடுத்து 2019 ஆம் ஆண்டு கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு உடல் எடையை குறைத்து ஸ்லிமாக மாறிய இவர் விஜய் டிவியில் மிகப் பாப்புலராக இருந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு தனது சமையல் திறமையை வெளிப்படுத்தினார்.

தற்போது ரஜினி என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் தனது தந்தையின் மறைவு குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ஷெரின் ஒரு உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது “நான் உன்னை மிகவும் நேசித்தேன்.  என் வாழ்நாள் முழுவதும் உனது அன்பிற்காக ஏங்கினேன்.

ஒரு வாரத்திற்கு முன்பே நீங்கள் இறந்து விட்டீர்கள். ஆனால் இன்று தான் எனக்கு தகவல் கிடைத்தது. அதைக் கேட்டு நான் மனமுடைந்து போனேன். உங்களது இந்த படம் தான் என்னிடம் உள்ளது. இது என்னிடம் எப்போதும் இருக்கும். மிஸ் யூ என்று பதிவை வெளியிட்டு இருக்கின்றார். தந்தையை விவாகரத்து செய்த பிறகு தனது தாயுடன் ஷெரின் வாழ்ந்து வருகிறார். ஆனால் தனது தந்தையின் மறைவு குறித்த தகவலை ஒரு வாரத்திற்கு பிறகு தான் அவருக்கு தெரிய வந்துள்ளது. இதை கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்த ஷெரின் இந்த பதிவை வெளியிட்டு இருக்கின்றார்.

 

View this post on Instagram

 

A post shared by Sherin Shringar (@sherinshringar)

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top